search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மோதி ஒருவர் பலி
    X

    பஸ் மோதி ஒருவர் பலி

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×