என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
- வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்