search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra"

    காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.

    இந்திய அரசியலின் உயிருடன் இருக்கும் மிக மூத்த தலைவர் ஆதலால் கருணாநிதியை சந்திக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர்.



    அதன்படி, இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தார். முக ஸ்டாலினிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த தேவகவுடா, கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்தும் நலமுடன் வாழ்வார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை காவிரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மனைவியை ஊரார் உதவியுடன் காட்டுப்பாதை வழியே 12 கிலோ மீட்டர் தூரம் கணவர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #NHRC
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கலக்கமடைந்த கணவர் சாலை வசதி இல்லாததால் கிராமத்து மக்கள் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தனது மனைவியை தூக்கிச் சென்றுள்ளார்.



    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

    இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
    ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். #AnnaCanteens
    நகரி:

    தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க அம்மா கேன்டீன்களை திறந்தார்.

    அதேபோல் ஆந்திராவில் மறைந்த முதல்வர் என்.டி. ராமராவ் பெயரில் மலிவு விலை உணவு கேன்டீன்கள் திறக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். ஆந்திராவில் என்.டி. ராமராவ் அன்பாக ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகிறார்.

    இதையடுத்த அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக ஆந்திர அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து சென்றனர்.

    இதையடுத்து ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆந்திரா தலைநகர் அமராவதியில் தலைமை செயலகத்தில் 2016-ம் ஆண்டு அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

    மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தொடங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தன.


    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்கள் முதல்கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது. விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா’ கேன்டீனை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.

    இங்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

    அண்ணா கேன்டீன் திறந்தது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “இந்த கேன்டீன்களில் தூய்மை, சுகாதாரம், தரம் ஆகியவை சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் உள்ள ரெஸ்டாரண்ட்கள் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பராமரிக்கப்படும். இந்த திட்டத்துக்கு பலதரப்பினர் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

    இதற்கிடையே அண்ணா கேன்டீன்களுக்காக பலர் பணமாகவும், காய்கறிகளாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள். #AnnaCanteens
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.



    அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய எம்.பி ரமேஷ், ஆலை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இறுதி வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திராவில் இறந்த பெண்ணுக்கு கடவுள் உயிர் கொடுப்பார் என்று நம்பி அவரது குடும்பத்தினர் மூன்று நாட்களாக சடலத்தை புதைக்காமல் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டி குடம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, அந்த வீட்டில் வசித்து வந்த அருணா ஜோதி (வயது 41) என்ற பெண் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடந்தது தெரியவந்தது. இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    ஆனால், அருணா ஜோதி இறந்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அவரது தாயும், தம்பியும் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம், அருணா ஜோதி இறந்துவிட்டதாக கூறியும்  எந்த ரியாக்சனும் இல்லை. அருணா ஜோதியின் உயிரை கடவுள்தான் எடுத்தார், கடவுள் மறுபடியும் உயிர் கொடுப்பார் என்று இருவரும் கூலாக கூறியுள்ளனர்.

    பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருணா ஜோதி இறந்ததால், அவரது குடும்பத்தினரின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

    வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பசியால் அருணா ஜோதி இறந்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. #AndhraSuperstition #FamilyKeepsBody
    சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் இறந்த சென்னை வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதியைச் சேர்ந்த பாஸ்கர்-அனுராதா தம்பதியினர் ஒரு மோட்டார் சைக்கிளில் சத்தியவேடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். சத்தியவேடு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நின்றிருந்த 5 மோட்டார் சைக்கிளில் வந்த 12 வாலிபர்களில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, அனுராதா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் 9 வாலிபர்களை மடக்கிப்பிடித்து, சத்தியவேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ராஜி (வயது 24), பிரசாந்த் (20), அபினேஷ் (21), வினோத்குமார் (21), மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (21), கோரிமேடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (21), போரூரை சேர்ந்த ஜான்சார்லஸ் (21) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது ராஜி போலீஸ் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

    பிடிபட்ட 8 பேரும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராஜின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரின் அருகேயுள்ள கனூரு பகுதியில் அமைந்துள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய விருதானபாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ஆந்திராவில் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் காதல் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.

    மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.

    இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

    ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமலை, மே.12-

    ஆந்தி£வில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினர் அய்யம்மாள் (23) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

    இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    ஏனெனில், 13 வயது சிறுவன் 'மைனர்' என்பது தெரிந்தும், அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி அறிந்ததும், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர்.

    இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. * * * திருமணம் முடிந்ததும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண். ( சமூக வலை தளங்களில் வெளியான படம்.)

    ×