search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramesh"

    • கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி.
    • விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி. ரமேஷ் குடவாலா தமிழ்நாட்டின் முன்னள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்குமான பிரச்சனை நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் வெளியானது அப்போது நடந்த நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து நானும் சூரியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார்.

    இப்பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் விஷ்ணு விஷால், சூரி மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேரம் தான் எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் பதில், லவ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவினை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற கொண்ட ரமேஷ், பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்த எச்.ரமேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

    பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ வேண்டாம். அதற்கு பதிலாக துணிப்பைகள் மற்றும் காகித பைகளை பயன்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.



    அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய எம்.பி ரமேஷ், ஆலை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இறுதி வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திர மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில எம்.பி ரமேஷ் 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #BJP #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும், ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அப்போது அளித்திருந்தது.

    ஆனால் இந்த 4 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும், பா.ஜ.க மீதான பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்த வாக்குறுதியின்படி, கடப்பா மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில தெலுங்குதேசம் எம்.பி ரமேஷ் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் நடைபெறும் இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது. #BJP #AndhraPradesh
    ×