search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indefinite hunger strike"

    ஆந்திர மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில எம்.பி ரமேஷ் 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #BJP #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும், ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அப்போது அளித்திருந்தது.

    ஆனால் இந்த 4 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும், பா.ஜ.க மீதான பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்த வாக்குறுதியின்படி, கடப்பா மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில தெலுங்குதேசம் எம்.பி ரமேஷ் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் நடைபெறும் இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது. #BJP #AndhraPradesh
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். #JactoGeo
    திருச்சி:

    ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.தாஸ், சுரேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், செ.முத்துசாமி, அ.மாயவன், மு.அன்பரசு, ஆர்.தாமோதரன், க.வெங்கடேசன், நிதி காப்பாளர் மோசஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * கடந்த 8-ந்தேதி ஜாக்டோ- ஜியோ நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    * ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

    * கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும்.

    * பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும்.

    * நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  #JactoGeo
    ×