search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter list"

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    • அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.

    சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.

    இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    • கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை.
    • புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    மடகாஸ்கர் உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷனர்கள், அதிகாரிகள், இந்தியாவுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலைப் பற்றி ஏற்கனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கியுள்ளது.

    அதைத்தொடர்ந்து, தற்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 250 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள்.

    இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழகத்தின் சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்ற மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் ஐ.ஜி அல்லது போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். தேர்தல் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும்.

    கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவில் பதிவு தபாலில் அனுப்பப்படும்.

    புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.
    • மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி, ஜூலை 1-ந்தேதி அக்டோபர் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள், பெயர் நீக்கம் செய்ய விரும்புகிறவர்கள் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாற்றியவர்கள், முகவரி அல்லது புகைப்படம் மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பான படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் -6ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி திருத்தம் செய்யவும், ஒரே சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் திருத்தம் செய்ய படிவம்-8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல்
    • தேர்தல் துறை அதிகாரிகள் குழு ஆய்வு

    புதுச்சேரி:

    புதுச்சேரி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை புதுச்சேரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான வல்லவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக படிவங்கள் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறதா, 18 வயதான புதிய வாக்காளர்கள் எத்தனை படிவங்கள் வந்துள்ளது என உள்ளிட்ட விவரங்களில் வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது துணை கலெக்டர் வினைகுமார், வாக்காளர் பதிவு அதிகாரி சந்திரகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதைப்போல தேர்தல் பார்வையாளர் மற்றும் செயலர் முத்தம்மா, தாசில்தார் கோபால கிருஷ்ணன், துணை தாசில்தார் விமலன் ஆகியோர் தனிக்குழுவாக ஆய்வு செய்தனர்.

    • வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    • 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும் வழங்க வேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இதற்கான சிறப்பு முகாம் கடந்த 4 நாட்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டது.

    முதல் கட்டம் 4 மற்றும் 5-ந்தேதி நடந்தது. 18, 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டன.

    அந்த முகாம்கள் நாளை (25-ந்தேதி) மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் படிவங்கள் 6, 6ஏ, 7, மற்றும் 8ஐ ஆகியவற்றை பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    • 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில்27.10.2023 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது .

    சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18+ இளம் வாக்காளர்களை சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியத்தின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் 9.12.2023 உடன் முடிவடைய உள்ளதால் வாக்காளர்பட்டியலில் பெயர் இடம் பெறாத 18+ நபர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் ெபயர் சேர்ப்பதற்கான படிவம் 6 யினை நேரிலோ அல்லது இணைய தளம் வாயிலாகவோ அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • ஏற்கனவே 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது
    • 25, 26-ந்தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    ஊட்டி,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2024, 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.

    இதன்படி 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, 18.11.2023-ஐ தமிழ்நாடு அரசு வேலை நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைத்திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் 9.12.2023 ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு, எதிர்வரும் 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது
    • வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களாக மாறி வருகிறது. அவ்வகையில், விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், இ - வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளக்ஸ் பேனர் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பார்வைக்கு படும்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 2024 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தவிர, 2024 ஏப்., 1 - ஜூலை 1 மற்றும் அக்., 1 தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியடையும் நபர்களும், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஆகிய விண்ணப்பங்களில், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தவிர, Voter Help Line என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரியும், ஆதார் விபரம் இணைக்கவும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×