என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுகோள்
- 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில்27.10.2023 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது .
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18+ இளம் வாக்காளர்களை சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியத்தின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18-29 வயதுடைய இளம் வாக்காளர்களிடமிருந்து நாளது வரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது .
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் 9.12.2023 உடன் முடிவடைய உள்ளதால் வாக்காளர்பட்டியலில் பெயர் இடம் பெறாத 18+ நபர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் ெபயர் சேர்ப்பதற்கான படிவம் 6 யினை நேரிலோ அல்லது இணைய தளம் வாயிலாகவோ அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்