search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியலில்"

    • ஏற்கனவே 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது
    • 25, 26-ந்தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    ஊட்டி,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2024, 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.

    இதன்படி 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, 18.11.2023-ஐ தமிழ்நாடு அரசு வேலை நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைத்திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் 9.12.2023 ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு, எதிர்வரும் 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் தொடங்கியது.
    • பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை களில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும்,

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் voterhelpline என்ற செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று அந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் தொடங்கியது. பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை மற்றும் வரும் 18, 19-ந் தேதிகளில் இந்த சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்.

    • பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    • கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்குசாவ டிகளில் வரும் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள  இணையதள முகவரியிலும், செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்களும் சம்பந்தப்பட்ட வாக்கு ச்சாவடிகளை அணுகியும் அல்லது இணைய வழி மூலமாகவும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்கள் பிறப்புச்சான்று, ஆதாரஅட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம், மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதல் அதில் பிறந்த தேதி இருந்தால், இந்திய கடவுச்சீட்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க இறப்பு எனில் இறப்புச்சான்றும், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர் எனில் அதற்குரிய முகவரி சான்றும் சமர்ப்பிக்கவும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஆதார அட்டை, குடி பெயர்ப்பி ற்கான சான்று, மாற்றுத்தி றனாளி என குறிப்பிட வேண்டும் எனில் மாற்றுத்திறனாளி க்கான சான்று ஆதரா ஆவணங்க ளாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண் 0424 1950-னை தொடர்பு கொள்ளலாம்.

    இப்பணிகளை மேற்பா ர்வை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.சங்கர் ஈரோடு மாவட்டத்திற்கு நாளை வருகை புரிந்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவ லர்கள் மற்றும் அங்கரீக்கப்பட்ட கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெற வழிவகை செய்துள்ளது.
    • இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2023-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குசாவடி மையங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் வரும் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறும் பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள www.nvsp.inv என்ற இணையதள முகவரி மூலம் வாக்காளர் சேவைகளை பெறதேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    ×