search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

    • ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெற வழிவகை செய்துள்ளது.
    • இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2023-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குசாவடி மையங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் வரும் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறும் பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள www.nvsp.inv என்ற இணையதள முகவரி மூலம் வாக்காளர் சேவைகளை பெறதேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    Next Story
    ×