search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addition of name to voter list"

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் தொடங்கியது.
    • பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை களில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும்,

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் voterhelpline என்ற செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று அந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் தொடங்கியது. பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை மற்றும் வரும் 18, 19-ந் தேதிகளில் இந்த சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்.

    ×