search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

    • பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    • கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்குசாவ டிகளில் வரும் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையதள முகவரியிலும், செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்களும் சம்பந்தப்பட்ட வாக்கு ச்சாவடிகளை அணுகியும் அல்லது இணைய வழி மூலமாகவும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்கள் பிறப்புச்சான்று, ஆதாரஅட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம், மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதல் அதில் பிறந்த தேதி இருந்தால், இந்திய கடவுச்சீட்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க இறப்பு எனில் இறப்புச்சான்றும், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர் எனில் அதற்குரிய முகவரி சான்றும் சமர்ப்பிக்கவும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஆதார அட்டை, குடி பெயர்ப்பி ற்கான சான்று, மாற்றுத்தி றனாளி என குறிப்பிட வேண்டும் எனில் மாற்றுத்திறனாளி க்கான சான்று ஆதரா ஆவணங்க ளாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண் 0424 1950-னை தொடர்பு கொள்ளலாம்.

    இப்பணிகளை மேற்பா ர்வை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.சங்கர் ஈரோடு மாவட்டத்திற்கு நாளை வருகை புரிந்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவ லர்கள் மற்றும் அங்கரீக்கப்பட்ட கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    Next Story
    ×