search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர் சேர்த்தல் முகாம்"

    • படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.
    • மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி, ஜூலை 1-ந்தேதி அக்டோபர் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள், பெயர் நீக்கம் செய்ய விரும்புகிறவர்கள் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாற்றியவர்கள், முகவரி அல்லது புகைப்படம் மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பான படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் -6ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி திருத்தம் செய்யவும், ஒரே சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் திருத்தம் செய்ய படிவம்-8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்தம் செய்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் 2023 விழிப் புணர்வு கலை நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

    இதில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்ய, வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது திருத்தம் செய்வது குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது.
    • வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    தேர்தல் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல்திருத்தப்பணி நடைபெறுகிறது.முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ந் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

    https://www.nvsp.in என்கிற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎனும் செல்போன் செயலி மூலமாகவும் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.

    மேலும் தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலா ம் என திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×