search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle inspection"

    • கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    சென்னை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்ட நாட்டில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

    கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையில் உள்ள 12 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (கிளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    ஊட்டி:

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும், மனிதரையும் தாக்கவல்லது. நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது.

    பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி, முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூ டாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்துக்கசிவு காணப்படும். பறவைக்காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

    மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பசவகல்யாண தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணள்ளி என்ற சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ஏராளமான சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்த பறக்கும் படையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சேலைகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுப்பற்றி தெரியவந்ததும் வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கடைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    • போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாலாஜா பகுதிகளிலும் நடைபெற்று வந்த திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந் நிலையில் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் விளாபாக்கம் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் குரு (வயது 33) என தெரிய வந்தது. தனியாக உள்ள பெண்கள் மற்றும் வயதான பெண்க ளிடம் அச்சுறுத்தி நகை களை பறித்ததாக கூறினார்.

    அவரிடம் இருந்து 4 பவுன் நகை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினார்
    • 3 பைக்குகள் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் வி.சி.மோட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன.
    • ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு அறிவுறுத்தலின் பேரில் கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அதனை நிறுத்தி போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய போது, கடலூர் புதுநகர் பகுதியில் 7 தனியார் பஸ்கள் , ரெட்டிச்சாவடி பகுதியில் 8 தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் உரிமம் இல்லாத பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் உரமம் மற்றும் உரிய ஆவணத்துடன் சென்று வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • பைக் பறிமுதல்

    கலவை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பதும், பைக்கில் 2கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து கலால் போலீசார் ராஜேஷை கைது செய்து, 2கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 20ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.
    • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பெருமாத்தூரில் வசிப்பவர் முகமது பெரேஷ் (வயது 34). இவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக முகமது பெரேஷ் வீட்டை பூட்டிக்கொண்டு புதுவையிலேயே தங்கியுள்ளார். இதனை நோட்டம் விட்ட மர்மநபர்கள், கடந்த 18-ந்தேதி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 350 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு சிலிண்டரை திருடிச் சென்றனர். இது தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கீழ் புவனகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 22), உளுந்தூர்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (36), அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (37), புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.

    மேலும், இதில் ஆனந்தராஜ், மருதுபாண்டி ஆகியோர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதும் போலீ சாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் புவனகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பெருமாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் சிலிண்டர் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தர வின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) என்பது தெரிய வந்தது. இவர் 4 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை யொட்டி வழக்கு பதிவுசெய்து சர்வேசை கைது செய்தனர்.

    • தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
    • இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    • தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடை பெற்றது.
    • சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையிலும், சாலையில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் தொடந்து நடைபெற்று வந்தது.

    இது தொடர்பான புகார்கள் மாவட்ட குற்றபிரிவு போலீசாருக்கு சென்றது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட அஞ்சார்வார்த்தலை பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவரும் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சை்கிகளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    அவர்களை தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராம்பாறை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வம் என்கிற முனியப்பிள்ளை என்பதும், இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் ரூ.10,000/- ரொக்கம் திருடிய சம்பவத்திலும், பெரம்பூர் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்ச ம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்களி டமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இவர்கள்மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×