search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருமி நாசினி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    • சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.

    இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.

    • தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் வவ்வாலடியில் தொடங்கியது.
    • தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது.

    இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாம் வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை ஊராட்சி பகுதி முழுவதும் நடக்கிறது.

    அதேபோல் பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் கொடியசைத்து முகாமை துவக்கி வைத்தார்.

    • குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
    • சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தொட்டியில் ஏறி தாஜுதீன் அதன் உள்ளே இறங்கி குடிநீர் தொட்டியின் சுத்தம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.

    இதுகுறித்து நாச்சிகுளம் பகுதி உறுப்பினர்கள் அஜிரன், ராயல்காதர் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து தங்கள் வார்டுகளில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

    குடிநீர் வினியோக பணியாளர் முறையாக பராமறிப்பு பணிகளை செய்வது கிடையாது. நாச்சிகுளம் பகுதி நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் .

    இதுபோல் ஒவ்வொரு மாதமும் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    ×