சென்னைக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ. 40 லட்சம் சேலைகள் பறிமுதல்

24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னைக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ. 40 லட்சம் சேலைகள் பறிமுதல்
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் உள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பசவகல்யாண தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணள்ளி என்ற சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ஏராளமான சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்த பறக்கும் படையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சேலைகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுப்பற்றி தெரியவந்ததும் வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கடைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com