என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ration Shops"
- அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
- ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம். பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய கோர்ட்டுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே தரம் பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.
இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 31-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும். நிவாரண நிதி வழங்கும் பணிகளுக்காக அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
- வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
- கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
- 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சென்னை :
மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
- மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதில் சென்னை மாநகரம்-புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஏராளமானோர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் சேதம் அடைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் உத்தரவிட்டார்.
இது மட்டுமின்றி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தவிர கால்நடைகள், பயிர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் டோக்கன் வினியோகிக்க அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகளில் பணம் வினியோகித்து விடலாம் என்று அரசு கருதுவதால் நாளை முதல் டோக்கன் வினியோகிக்க அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அனைத்து பகுதிகளுக்கும் பெரும்புதூர் தாலுகாவில் மேவலூர் குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கும் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்குள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கியதும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக இருப்பதால் இங்குள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்காது.
குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வசதி படைத்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.
வருமான வரி செலுத்துபவர்கள், அரசு அதிகாரிகளில் ஏ.பி. வகையான அதிகாரிகள், மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவில் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.
- ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
- அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு பலகை வைக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு கூட்டம் அனைத்து தன்னார்வ அமைப்புகளை கொண்டு நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட வழங்க அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் நுகர்வோர் மைய செயற்குழு உறுப்பினர் துரை. ராயப்பன், முருகானந்தம், கலா, சரோஜினி அண்ணாதுரை, அரிமா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், அனுமதி இல்லாத இடத்தில் கேஸ் சிலிண்டர் விற்பதை தடை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு அறிவுப்பு பலகையும், குறைகள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும், விடுமுறை நாட்கள் மற்றும் பணி நேரம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் நாகராஜன் தலைமையில் வட்ட வழங்க அலுவலர் மதியழகனிடம் அளிக்க ப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- காய்கறி மாலையுடன் திரண்டனர்
- அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த நேருவீதி-மிஷன்வீதி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மாதர்சங்க மாநில தலைவி முனியம்மாள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் உமாசாந்தி, மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் இளவரசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் தாட்சாயிணி, பரிமளா, பிரியா, ஜானகி, சிவசங்கரி, கோமதி, மாலதி, சந்திர வதனி, மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் மிஷன்வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. செயின்ட் தாழ் வீதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் பால் பாக்கெட், காய்கறி, மளிகை பொருட்களை நூலில் கட்டி தூக்கி வந்தனர். ரேஷன்கடைகளை திறந்து அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும்.
ரெஸ்டோபார்களை இழுத்து மூட வேண்டும். அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
மகளிருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தை 100 நாட்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் களைந்து சென்றனர்.
- கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்.
- சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
திருப்பூர்:
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சா் சக்கரபாணியிடம் வலியுறுத்தியுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.
இது குறித்து அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக, டெல்லி சென்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் கைலாஷ் செளத்ரியை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து மனு அளித்தோம்.
அப்போது அவா், சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்கி அரை லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினாா். அமைச்சரின் இந்த பதில் தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றாா்.
கட்சி சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:-
விவசாயிகளுக்கான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக திருப்பூா் மாவட்டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31 வரை தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த மாதம் சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்கிடையே 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி கூறியுள்ளாா். அமைச்சரின் இந்த அறிவிப்பை வெறும் கண் துடைப்பாகவே கருதுகிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக ரூ.30க்கு ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றாா்.
- பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
டெல்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் கைலாஷ் சௌத்திரி, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து,மகளிர் அணி தலைவி ராஜரீகா, கோவை மாவட்ட பொருளாளர் மகாலிங்கம்,அதிமுக., திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்னை விவசாயிகள் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் இருக்கின்ற தண்ணீரை கொண்டு தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அதனால் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அதே சமயம் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள கேரளாவில் தேங்காய் எண்ணெய் வீட்டு சமையல், நொருக்கு தீனி உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மட்டும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேகதாது நதியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பனை கட்ட திட்டமிட்டுள்ளதை தடுக்க வேண்டும் என்றதற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் காவேரி நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் ஆணையிட மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், திருப்பூர்மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
- இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை:
தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம்
இதனை ஒட்டி இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகளை வருவாய் மற்றும் கூட்டுறவுத்துறை பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஊரக பகுதியில் மொத்தம் உள்ள 528 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ரேஷன் கடைகளில் வினியோகம்
மாவட்டத்தை பொறுத்த வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட வில்லை. பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பும், ரேஷன் கடைகள் முன்பும் பொது மக்களை வர வழைத்து டோக்கன் விநியோ கிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாளை கே.டி.சி. நகரில் ரேஷன் கடை முன்பு டோக்கன் விநியோகிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
5 லட்சம் விண்ணப்பங்கள்
நெல்லை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பிப்பதற்காக 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்து ள்ளது. இவை அனைத்தும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு முழுமையாக நிரப்பப்பட்டு வருகிற 24-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தகுதியான வர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடை பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நகர்புறத்தில் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
- தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.
ரேஷன்கடைகள் திறப்பு
தலா ரூ. 13.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மடத்துவிளை கடையின் கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் வரவேற்று பேசினார்.
கனிமொழி எம்.பி. ஆய்வு
பின்னர் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே முன்பு குப்பை கிடங்காக இருந்து தற்போது தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர். அந்த இடத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், தயாவதி, சிவக்குமார், ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்