search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consideration"

    • ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் விவாதம் வருமாறு:-

    முத்துசாமி (சிபிஎம்):- சிஐடியூ., தொழிற்சங்க முறையீட்டால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பளத்தை உள்ளாட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சேதுமாதவன் (திமுக):- தேவம்பாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். குளத்துப்பாளையம் டீச்சா்ஸ் காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.

    காா்த்திகேயன்(திமுக):- பழங்கரை ஊராட்சி ராஜா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பார பட்சமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும்.

    அய்யாவு (அதிமுக):- குப்பாண்டம்பாளையத்தில் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும். அய்யம்பாளையம் மயானத்துக்கு சாலை அமைக்க வேண்டும். வடுகபாளையம், குப்பாண்டம்பாளையம், அய்யம்பாளையம், துலுக்கமுத்தூா் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள தாா் சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் கூறும்போது, உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    • ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு பலகை வைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு கூட்டம் அனைத்து தன்னார்வ அமைப்புகளை கொண்டு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்ட வழங்க அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் நுகர்வோர் மைய செயற்குழு உறுப்பினர் துரை. ராயப்பன், முருகானந்தம், கலா, சரோஜினி அண்ணாதுரை, அரிமா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், அனுமதி இல்லாத இடத்தில் கேஸ் சிலிண்டர் விற்பதை தடை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு அறிவுப்பு பலகையும், குறைகள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும், விடுமுறை நாட்கள் மற்றும் பணி நேரம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் நாகராஜன் தலைமையில் வட்ட வழங்க அலுவலர் மதியழகனிடம் அளிக்க ப்பட்டது.

    மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
    • மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மாநகராட்சி அனைத்துபிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் ஆகியவை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதற்கு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், வருவாய் உதவியாளர் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி செல்வமணி, துப்புரவுபணி மேற்பார்வையாளர் சங்க நிர்வாகி கலியபெருமாள், மருந்தாளுனர் சங்க நிர்வாகி இளந்தமிழன், துப்புரவு பணியாளர் சங்க மநில தலைவர் ராமன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஜெய்ராஜ் ஆகியோர் பேசினர்.

    போராட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்: 152-ன்படி இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் அவுட் "சோர்சிங் மூலம் இனி வரும் காலங்களில் நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

    இந்த அரசாணை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

    ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி நிறைவு செய்து பேசினார். முடிவில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகி மூர்த்தி நன்றி கூறினார்.

    • யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின் படி ரசீது வழங்குவதில்லை.
    • அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம், யூரியா அரசு நிர்ணயத்தை விலையை விட ரூபாய் 50 முதல் 80 வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு எந்த ஒரு கைரேகை பதிவு செய்து கொடுக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மீறி கேட்டால் உங்களுக்கு உரம், யூரியா போன்ற பொருள்கள் உங்களுக்கு கிடையாது என்று கூறுகின்றனர். விவசாயிகள் தனியார் கடைகளில் வாங்கும் உரம் யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின்படி ரசீது வழங்குவதில்லை. இதனைப் போக்க மாவட்ட ஆட்சியர்,வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அதிக விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களது லைசன்ஸை ரத்து செய்து விவசாயிகளுக்கு இதனை வெளிப்படுத்தி அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கடைகளிலும் டி.ஏபி.உரம் , யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவர்களின் இருப்பு பட்டியல் மற்றும் விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி விலைப் பலகையில் எழுதி வெளியில் வைக்க வேண்டும். அதில் முறைகேடுகள் நடந்தால் யாருக்கு புகார் அளிக்க வேண்டும் என்று அந்த தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட வேண்டும். இந்த முறைகேட்டை போக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து உரங்களையும் வரவைத்து விவசாயிகளிடம் ஆதார் அட்டை மற்றும் அடங்களை வாங்கிக் கொண்டு ரொக்க விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு பலனாகவும் நாட்டில் முதுகெலும்பான விவசாயத்தை முற்றிலும் பாதுகாக்க நேரிடும். இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்தால்அரசுக்கு நற்பெயர் உண்டாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

    • வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன.
    • வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் துறையில் தாய் சங்கமாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) விளங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி முதல் சைமா அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டன.

    தலைவர் பதவியை தவிர மற்ற பதவிகளுக்கு புதியவர்கள் போட்டியிடுவதாக தகவல் பரவியது. வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக உள்ள வைகிங் ஈஸ்வரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மற்ற பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு வைகிங் ஈஸ்வரன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 1 துணைத்தலைவர் பதவிக்கு 2 பேரும், 2 இணைச்செயலாளர்கள் பதவிக்கு 3 பேரும், 1 பொருளாளர் பதவிக்கு 3 பேரும், 1 பொதுச்செயலாளர் பதவிக்கு 2 பேரும், 21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 45 பேரும் என மொத்தம் 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 25-ந் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் 26-ந் தேதி வெளியிடப்படும். 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சைமா அலுவலகத்தில் தேர்தல் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகளில் தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.
    • 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நெல் கொள்முதல் மற்றும் பொது வினியோகத் திட்டம் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மக்களின் உணவு உரிமையை உறுதிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை இது. எனவே இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.சமூகத்தில் நலிந்த பிரிவினர், விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். பொதுவாக, குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்களை பரிசீலித்து 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக மக்களை அலையவிடக் கூடாது.

    நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள், சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆய்வுகள் செய்து வருகிறோம். தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.நாகப்பட்டினத்தில் பழுதடைந்த நியாய விலைக் கடைகளை விரைந்து புதுப்பித்து கட்ட வேண்டும். 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    கைரேகை பதிவில் முதியோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் நேரடியாக வர முடியாவிட்டால் அவர்கள் அனுப்பும் பிரதிநிதியிடம் பொருள்களை வழங்க வேண்டும். மாற்றுத்தி றனாளிகளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக அவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும்.நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கிவைக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×