search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Member Requests"

    • ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் விவாதம் வருமாறு:-

    முத்துசாமி (சிபிஎம்):- சிஐடியூ., தொழிற்சங்க முறையீட்டால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பளத்தை உள்ளாட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சேதுமாதவன் (திமுக):- தேவம்பாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். குளத்துப்பாளையம் டீச்சா்ஸ் காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.

    காா்த்திகேயன்(திமுக):- பழங்கரை ஊராட்சி ராஜா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பார பட்சமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும்.

    அய்யாவு (அதிமுக):- குப்பாண்டம்பாளையத்தில் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும். அய்யம்பாளையம் மயானத்துக்கு சாலை அமைக்க வேண்டும். வடுகபாளையம், குப்பாண்டம்பாளையம், அய்யம்பாளையம், துலுக்கமுத்தூா் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள தாா் சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் கூறும்போது, உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    ×