search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன்கடை"

    • கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்.
    • சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சா் சக்கரபாணியிடம் வலியுறுத்தியுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக, டெல்லி சென்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் கைலாஷ் செளத்ரியை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து மனு அளித்தோம்.

    அப்போது அவா், சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்கி அரை லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினாா். அமைச்சரின் இந்த பதில் தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றாா்.

    கட்சி சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக திருப்பூா் மாவட்டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31 வரை தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த மாதம் சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்கிடையே 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி கூறியுள்ளாா். அமைச்சரின் இந்த அறிவிப்பை வெறும் கண் துடைப்பாகவே கருதுகிறோம்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக ரூ.30க்கு ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றாா்.

    • கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ரேஷன் கடையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூர் வட்டத்தில், அன்னூர்-மேட்டுப்பா ளையம் ஊராட்சி உள்ளது. கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நியாய விலைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக்கடையின் கீழ் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கக்கூடிய மலிவு விலை பொருட்கள் (அரிசி, பருப்பு, சக்கரை) பொங்கல் பரிசு, சமையல் எரிவாயு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இந்த கடைக்கு மாதந்தோறும் கிராமத்தைச் சுற்றி உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    மக்கள் அதிகமாக வந்து செல்லும், நியாய விலைக்கடையில், அதன் மேல் சுவர்கள் விரிசல் விட்ட வண்ணம் உள்ளது. தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக சேதாரம் இன்னும் அதிகமாகும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

    மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் பட்சத்தில், மழைக்காலங்களில் ஏதேனும் நீர்க்கசிவு அல்லது மேற்கூரை இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவதங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    மேலும் அங்கு இருக்கும் பொருட்களும் சேதமாகி, அத்தியாசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனை சீர் செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் ஊரா ட்சியில் வேலை விஷயமாக வரும் பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறுவதற்கு இந்த கட்டிடத்தின் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே இங்கு இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது.
    • கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது

    குன்னூர்:

    குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

    குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

    சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது.

    இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

    ×