search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment"

    • கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய 11 மாநில சட்டசபை தேர்தல்களில் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்தோம்.
    • போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.

    கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
    • பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

    அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
    • நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

    டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது.

    வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன.

    காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தன.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்தது.

    இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
    • அப்போது பேசிய அவர், இந்த நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சி பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.

    எத்தனையோ நெருக்கடிகள், அடக்குமுறைகள் மற்றும் பல இன்னல்களைச் சந்தித்தோம். ஒருமுறை குஜராத் மாநிலத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அப்போது பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. குஜராத் பூகம்ப பாதிப்புகளைகூட அப்போது பிரதமர் பார்க்க வரவில்லை.

    இயற்கை பேரிடர்களில் முதல் மந்திரியாக நான் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறேன். அதனால் இன்றும் எனது தாரக மந்திரம் இந்தநாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது. அதனால் இந்தப் பாதையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.

    அதன்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களுக்கு நிதி பகிர்வு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் வளர்ச்சி தடைபட்ட மாநிலங்கள் சமநிலை பெறமுடியும் என குறிப்பிட்டார்.

    • ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.
    • பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது என்றார் தயாநிதி.

    புதுடெல்லி:

    இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அரசு. ஆனால், வரலாறு காணாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடிவிட்டது.

    10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?

    சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை ஒன்றிய அரசு.

    பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.

    இடைநிலை நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நல்லது வரவில்லை, நாமம் தான் வந்தது. ஏழைகளுக்கு பயனில்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

    மொழியை வைத்து மக்கள் வாழ்வை சீரழித்திடும் மோடி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற சபதமேற்போம் என காட்டமாக விமர்சித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 சீட்டுகள் கூட வெல்லாது என ஒரு அறைகூவல் வந்துள்ளது.
    • ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்கள் (காங்கிரஸ்) சென்ற முறை செய்தது போல இந்தமுறை செய்வீர்கள் என்றால் அதற்கு நானும் தயாராக வந்துள்ளேன். சென்ற முறை எனது பேச்சுக்கு எதிராக 2 மணி நேரம் நீங்கள் என்ன கொடுமை செய்தீர்கள். நாடு அதை பார்த்துக் கொண்டிருந்தது. நானும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 சீட்டுகள் கூட வெல்லாது என இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு அறைகூவல் வந்துள்ளது.

    என்னுடைய பிரார்த்தனை என்னவென்றால் குறைந்தபட்சம் நீங்கள் 40 இடங்களாவது வெல்ல வேண்டும். இன்று என்னவெல்லாம் பேசப்பட்டது என்று நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்வேன்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கே பேசியதையும், இங்கே பேசுவதையும் கேட்டேன். என்னுடைய நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

    எதிர்க்கட்சியின் காலக்கெடு முடிந்துவிட்டது.

    ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது. ஆனால் இந்தநோயாளிக்கு டாக்டர் என்ன செய்வார், பாவம். நோயாளிக்கு...நான் மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மிகப்பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய படிப்பை இழந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சியான நீங்கள் 40 இடங்களாவது வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.
    • காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது. டஜன் கணக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்த கட்சி தான் இந்தக் கட்சி.

    இதே காங்கிரஸ் கட்சி தான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை, மக்களவையின் மாண்பை ஜெயிலுக்கு தள்ளி பூட்டியவர்கள். இதே காங்கிரஸ் கட்சி தான் நாட்டை துண்டாடவும் பல பணிகளைச் செய்தது. இப்போது வடக்கு இந்தியா, தென் இந்தியா என பிரிப்பதற்கான பேச்சுக்களை பேசிவருகிறது.

    இந்த காங்கிரஸ் இன்று நமக்கு பாடம் எடுக்கிறது. இந்த காங்கிரஸ் அரசு பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தன்னுடைய பயனுக்காகப் பயன்படுத்தியது.

    காங்கிரஸ் ஆட்சியில் தான் நக்சல்வாதம் என்பது பெரும் வெற்றி பெற்றது. உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு பற்றி பாடம் எடுக்கிறது. தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டுமா? அல்லது விவசாயி வளர்ச்சி அடையவேண்டுமா? என்ற தன்னுடைய குழப்பத்திலேயே காலத்தை காங்கிரஸ் கடத்திவிட்டது.

    10 ஆண்டுகளில் 12-வது இடத்தில் இருந்த பொருளாதார நிலையை 11-வது இடத்திற்கு நாங்கள் எடுத்துவந்தோம். 11- ல் இருந்து 10 வருவது மிகப்பெரிய செயல் அல்ல.

    இந்த காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கை பற்றி மிகப் பெரிய பேச்சுகளை எல்லாம் பேசினார்கள். இவர்கள் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு முயற்சி செய்யவில்லை.

    ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு தர முயற்சி செய்யவில்லை. பாபா சாகேப் அம்பேத்கரை பெருமைப்படுத்த முயலவில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 'பாரத ரத்னா' விருதுகளை தன்னுடைய குடும்பத்தாருக்கு கொடுத்தார்கள்.

    காங்கிரஸ் கட்சி தன்னுடைய தலைவரை பற்றி எந்த உத்தரவாதம் இல்லையோ, அவர்கள் மோடியின் உத்தரவாதம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.

    ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எங்களுடைய 10 ஆண்டுகால வளர்ச்சியை உலகம், நாடு ஏன் அப்படி ஒரு பார்வை பார்க்கிறது.நாங்கள் சொல்லியதால் எதுவும் நடக்கவில்லை.

    நாங்கள் செய்த பல நல்ல பணிகளின் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் அவர்களை எந்தவிதமான குற்றமும் சொல்லவில்லை. அவர்களுடைய கட்சிக்காரர்களே அவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை சொல்லி இருகிறார்கள்.

    சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவை உறுப்பினர்கள் நம்முடைய நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது, ஜிடிபி வளர்ச்சி குறைந்துவிட்டது, விலைவாசி சில வருடங்களாக அதிகரித்தே வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருகிறது என்கின்றனர்.

    இது பாரதிய ஜனதா கட்சி பேச்சு அல்ல. என்னுடைய பேச்சு அல்ல. இது 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் கூறிய வார்த்தைகள்.

    இப்போது இரண்டாவதாக ஒரு பேச்சு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

    நாடு முழுவதும் மக்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற கோபம் இருக்கிறது. இதையும் டாக்டர் மன்மோகன் சிங் சொன்னார்.

    ஊழல் பற்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரி வசூலில் ஊழல் நடக்கிறது. இதற்காக ஜி.எஸ்.டி. கொண்டு வரவேண்டும். ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகிப்பதில் ஊழல் நடக்கிறது.

    இதனால் ஏழை மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள். இதனை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவையும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் சொன்ன வார்த்தைகள்.

    அப்போது வேறொரு மாதிரி சொன்னார். இந்தியாவில் இருந்து தலைநகர் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் போனால் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது. தங்களுக்கு உள்ள குறை மட்டும் தெரிந்திருந்தது. ஆனால் வைத்தியம் என்ன என்று தெரியவில்லை.

    மந்தம் மற்றும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தைப் பா.ஜ.க. கடுமையான உழைப்பின் மூலமாக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளோம் என தெரிவித்தார்.

    • சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
    • வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதையும் வழங்கவில்லை.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    கடந்தகால சாதனைகளையும் இந்த பட்ஜெட் சொல்லவில்லை; நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை.

    மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்து அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த பட்ஜெட்.

    வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை.

    எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

    உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை.

    இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும்?

    நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லாநிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.


    இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

    மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, பாராளுமன்ற தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

    நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

    ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

    இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

    மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.


    மெட்ரோ ரெயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி, நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?

    இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய 4 பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த 4 பிரிவினர்களையும் 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது.

    "சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையை சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வருகிறது.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும், சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சக்கட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

    2047-ம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன் முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

    தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
    • பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

    பட்ஜெட்டை கவனமாகக் கேட்டேன். இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இது அவர்களின் அன்றாடப் பணிகளுக்கான பட்ஜெட். 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளின் விவரத்தை கொடுக்கவில்லை.

    எத்தனை வாக்குறுதிகளை அளித்தார்கள், எத்தனை நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். ஒப்பிட்டு அறிக்கை கொடுக்கவேண்டும்.

    2014-க்கு பிறகுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடு ஜனநாயகத்தைப் பார்க்கிறது என்றும் நினைக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

    கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறிய அனைத்து வாக்குறுதிகளும் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்பி சுஷில் குமார் ரிங்கு:

    இளைஞர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் தங்களது மேம்பாடு பற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

    காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா ஷிண்டே:

    மத்திய அரசு இன்னும் மறுப்பு நிலையில் உள்ளது. பிரச்சனைகளை ஏற்க தயாராக இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சாமானிய மக்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் குறித்து எதுவும் இல்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையான வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அரசின் தகவல் கூறுகிறது.

    தி.மு.க. எம்.பி. சிவா:

    அடுத்த முழு பட்ஜெட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நாங்கள் வந்து தாக்கல் செய்வோம். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வருகிற தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.

    • இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது.
    • பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டு, புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

    இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும் என தெரிவித்தார்.

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், இலக்குகள் குறித்த விவரங்களும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் எளிய மக்களுக்கானது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்றார்.

    • நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
    • இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

    எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

     


    அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.

    ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.




    ×