search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலாவது வெல்ல வேண்டும்: மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு
    X

    காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலாவது வெல்ல வேண்டும்: மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு

    • பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 சீட்டுகள் கூட வெல்லாது என ஒரு அறைகூவல் வந்துள்ளது.
    • ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்கள் (காங்கிரஸ்) சென்ற முறை செய்தது போல இந்தமுறை செய்வீர்கள் என்றால் அதற்கு நானும் தயாராக வந்துள்ளேன். சென்ற முறை எனது பேச்சுக்கு எதிராக 2 மணி நேரம் நீங்கள் என்ன கொடுமை செய்தீர்கள். நாடு அதை பார்த்துக் கொண்டிருந்தது. நானும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 சீட்டுகள் கூட வெல்லாது என இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு அறைகூவல் வந்துள்ளது.

    என்னுடைய பிரார்த்தனை என்னவென்றால் குறைந்தபட்சம் நீங்கள் 40 இடங்களாவது வெல்ல வேண்டும். இன்று என்னவெல்லாம் பேசப்பட்டது என்று நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்வேன்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கே பேசியதையும், இங்கே பேசுவதையும் கேட்டேன். என்னுடைய நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

    எதிர்க்கட்சியின் காலக்கெடு முடிந்துவிட்டது.

    ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது. ஆனால் இந்தநோயாளிக்கு டாக்டர் என்ன செய்வார், பாவம். நோயாளிக்கு...நான் மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மிகப்பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய படிப்பை இழந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×