search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natham viswanathan"

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

    காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

    நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

    • மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம்.
    • தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க மதுரை மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.

    பழனி:

    பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவி மனோகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொள்ள தயாராக உள்ளனர். இதற்காக அந்தந்த சட்டமன்ற தொகுதி அளவில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட் வருகிறது. அதன்படி தற்போது பழனியில் ஆலோசனை செய்யப்பட்டது. மதுரையில் நடக்கும் மாநாட்டில் குறைந்தது 25 லட்சம் பேர் திரளாக கலந்துகொள்வார்கள்.

    எனவே இந்த மாநாடு அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். மேலும் வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதும் உறுதி. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஓ.பன்னீர்செல்வம் முடிந்துபோன சகாப்தம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழா.
    • செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தாராபுரம் :

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் வழியாக வந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு பழனி முன்னாள் எம்.எல்.ஏ.வும் தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான கே .எஸ் .என். வேணுகோபால் அவரது செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளித்தார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அ.தி.மு..க.செயலாளர் டி.டி.காமராஜ், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், அர்பன் வங்கி தலைவர் சாமிநாதன், மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளர் மகேஷ், ராமகிருஷ்ணா கல்லூரி டிரஸ்டி உறுப்பினர் முத்துக்குமார்,நகர அம்மா பேரவை செயலாளர் கே. என். ராமலிங்கம் ,நகர பொருளாளர் சாமுவேல், நகர இலக்கிய அணி செயலாளர் மாதவன், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக கல்லூரி முதல்வர் முரளி, செந்தூர் மோட்டார்ஸ் நிறுவன மேலாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

    சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார் என்று நத்தம் விசுவநாதன் பேசினார். #nathamviswanathan #sasikala #jayalalitha

    சின்னாளபட்டி:

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 47 -வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் கொடியேற்றி விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆத்தூர்ஒன்றிய செயலாளர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி, மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோபி, முன்னாள மாவட்ட கவுன் சிலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணாவால் சுட்டிகாட்டப்பட்ட எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவால் வீருநடைபோட்டு தற்போது ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.

    100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை யாராலும் அழிக்க முடியாது. சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார். தி.மு.க.வில் செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு தலைவராக இருக்கும் தகுதி இல்லை. ஸ்டாலினுக்கு கொடுத்த தலைவர் பதவியை துரைமுருகனுக்கோ அல்லது ஐ.பெரியசாமிக்கோ கொடுத்திருக்கலாம்.

    இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் அன்பழகன், வக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பேட்ரிக் பிரேம்குமார், எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் பாலு, அய்யம்பாளையம் பேரூர் இளைஞரணி செயலாளர் மவுலானா, ஒன்றிய மாணவரணி பொருளாளர் சுகன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமுதாய், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #nathamviswanathan #sasikala #jayalalitha

    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    ×