search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KC Palanisamy"

    • அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
    • அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாணமை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து 2018-ல் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும், இணைய தளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர் பேடிலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இந்த புகாரை தொடர்ந்து கே.சி.பழனிசாமி கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என கூறி அ.தி.மு.க. நிர்வாகி போலவே தற்போதும் கே.சி.பழனிசாமி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    அது மட்டுமின்றி அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.

    அவர் அ.தி.மு.க.வின் கட்சி பெயரையும், சின்னத்தையும் 2021-ம் ஆண்டு முதல் தனது இணைய தளத்தில் பயன்படுத்தி வந்ததால் இதுகுறித்து இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த நவம்பர் 29-ந்தேதி அளித்த தீர்ப்பில் கே.சி.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், முகவர்கள், வேலையாட்கள் போன்றோர் www.aiadmk.org இணைய தளம் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்ததோடு, அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.50 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
    • அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே, கால தாமதத்துடன் வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக்கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு.

    அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும், தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு அப்போது பதவியில் இருந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    கேசி பழனிசாமி அளித்த புகார் மனு மீது செப்டம்பர் 13-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KCPalasisamy #HighCourt
    புதுடெல்லி:

    அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கேசி பழனிசாமி அளித்துள்ள மனுவை 4  வாரத்தில் விசாரித்து முடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்காமல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


    ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக செப்டம்பர் 13-ம் தேதி வரை கேசி பழனிசாமி புகார் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது  என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். செப்டம்பர் 13-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கேசி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #KCPalasisamy #HighCourt
    ×