என் மலர்
நீங்கள் தேடியது "Maitreyan"
- டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் போக்கு சரியாக இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணியை அறிவித்தது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா தான். கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருக்கிறார். குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சொல்லி இருக்கிறார்.
எதிலே குறைந்தபட்ச செயல்திட்டம் வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மொழிக்கொள்ளை, இருமொழிக்கொள்கை, கல்வி திட்டத்தில் தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை இப்படி பலவற்றில் எந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து வரப்போகிறது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறது.
அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. பல்வேறு நிர்வாகிகள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன்.
சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள். இன்று நான் வந்து இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி கூட்டணியை அதுதான் முடிவு செய்யும். அந்த கட்சி தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க.வில் அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
ஒரு வேளை அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அதில் பா.ஜ.க. பங்கு எந்த அளவுக்கு இருக்கும், மத்திய அரசின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கும் இதையெல்லாம் யோசிப்பார்கள்.
இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனை இல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200-ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தொடர்ந்து கட்சி மாறிட்டோம் என்று சொல்வது தவறான வாதம். ஒரு இயக்கத்தில் இருக்கிறேன். அந்த இயக்கத்தில் சந்தோஷமாக இருந்தால் நிச்சயமாக மாற மாட்டேன். பிரச்சனைகள் வருகிறது. சந்தோஷம் இல்லை. புழுக்கத்திலேயே அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த இலக்கை நோக்கி செல்கிறோம்.
ஓ.பி.எஸ். உடன் தொடர்பு இருந்தது. இப்போது கிடையாது.
கூட்டி வரப்பட்ட கூட்டத்தை பார்த்து விட்டு இ.பி.எஸ். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால் ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
- 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யாக பதவி வகித்தவர் மைத்ரேயன்.
- கடந்த ஆண்டு அக்டோபரில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார்.
அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.
- மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
- பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை:
முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தவர். 1991-ல் பா.ஜனதாவில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2000-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதை தொடர்ந்து 2002 முதல் 2019 வரை டெலலி மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.
அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டார்.
இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். அவர் பா.ஜனதாவில் இணைந்தது ஏன் என்பது பற்றி கூறியதாவது:-
மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நானும் பா.ஜனதா பட்டாளத்தில் ஒருவராக இணைந்து செயலாற்ற உள்ளேன்.
ஒரு கட்சியில் இருந்து விலகிய பிறகு அந்த கட்சியை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 2 வருடமாக எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதனாலேயே விலகினேன்.
கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தல் நிர்ணயிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி கட்சி அலுவலகத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன்.
- மைத்ரேயன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.
அதனை, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.
அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.
ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.
அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனுஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.
இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.
1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy






