search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maitreyan"

    • மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    • பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தவர். 1991-ல் பா.ஜனதாவில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2000-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதை தொடர்ந்து 2002 முதல் 2019 வரை டெலலி மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டார்.

    இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். அவர் பா.ஜனதாவில் இணைந்தது ஏன் என்பது பற்றி கூறியதாவது:-

    மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    தமிழகத்தில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நானும் பா.ஜனதா பட்டாளத்தில் ஒருவராக இணைந்து செயலாற்ற உள்ளேன்.

    ஒரு கட்சியில் இருந்து விலகிய பிறகு அந்த கட்சியை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 2 வருடமாக எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதனாலேயே விலகினேன்.

    கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தல் நிர்ணயிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கட்சி அலுவலகத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யாக பதவி வகித்தவர் மைத்ரேயன்.
    • கடந்த ஆண்டு அக்டோபரில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார்.

    அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    ×