தாராபுரத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனுக்கு வரவேற்பு

பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழா.செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனுக்கு வரவேற்பு அளித்த காட்சி.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனுக்கு வரவேற்பு அளித்த காட்சி.
Published on

தாராபுரம் :

முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் வழியாக வந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு பழனி முன்னாள் எம்.எல்.ஏ.வும் தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான கே .எஸ் .என். வேணுகோபால் அவரது செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளித்தார்.

நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அ.தி.மு..க.செயலாளர் டி.டி.காமராஜ், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், அர்பன் வங்கி தலைவர் சாமிநாதன், மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளர் மகேஷ், ராமகிருஷ்ணா கல்லூரி டிரஸ்டி உறுப்பினர் முத்துக்குமார்,நகர அம்மா பேரவை செயலாளர் கே. என். ராமலிங்கம் ,நகர பொருளாளர் சாமுவேல், நகர இலக்கிய அணி செயலாளர் மாதவன், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக கல்லூரி முதல்வர் முரளி, செந்தூர் மோட்டார்ஸ் நிறுவன மேலாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com