search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lingam"

    • திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

    2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

    3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

    4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

    5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

    6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

    7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.

    இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

    8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

    9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

    12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

    13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

    14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

    15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.

    அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

    16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.

    17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.

    பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

    18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.

    19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.

    20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.

    இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

    21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.

    22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

    24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

    25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

    தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

    26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.

    27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

    28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

    29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

    30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.

    • பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

    இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

    எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

    தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

    ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

    பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

    மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
    • அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்

    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".

    இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.

    நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.

    கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.

    இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    • பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
    • ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்

    சங்க நூல்களில் அர்த்தநாரீஸ்வரர்!

    அர்த்தநாரீஸ்வரர்பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார்.

    ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.

    திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன், பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில் மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும்,

    முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும் சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும் தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    துப்பில்லாத இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன. திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லாத தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    • லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம்
    • அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து,

    அர்த்தநாரீஸ்வரர்

    அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

    தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

    இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

    இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைக் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

    பரமாத்மா, ஜிவாத்மா, போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

    இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம், அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம், லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,

    பெண் ஆண் அலி எனும் பெற்றியன்

    பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை என்று போற்றுகிறார்.

    பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.

    மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.

    திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.

    இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.

    தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.

    அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.

    அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உருவைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.

    தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.

    இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.

    பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.


    • எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டு பூஜித்தான்.
    • பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபு.

    கால பைரவர் வழிபட்டுப் பூஜை புரிந்த லிங்கம் காசி லிங்கம் என்ற பெயருடன் உள்ளது. சப்தரிஷிகள் காளத்தீஸ்வரரைப் பூஜித்த பின்னர் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர். இவர்கள் பூஜை செய்த ஏழு லிங்கங்களும் மற்றும் எமன் பூஜை செய்த எமலிங்கமும் சித்திரகுப்தன் வழிபட்ட சித்திரகுப்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டுப் பூஜித்தான்.

    மார்கண்டேயர், அகத்தியர், வியாசர் போன்ற பலப்பல முனிவர்களும் வாயுநாதனை வழிபட்ட பிறகு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் மார்கண்டேய லிங்கம், அகத்திய லிங்கம், வியாச லிங்கம் என்ற திருநாமங்களுடன் விளங்குகின்றன. மகாபாரதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பு வியாசர் வழிபட்ட திருத்தரங்களில் திருக்காளத்தியும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களான சீனிவாசன், ராமன், கண்ணன் ஆகியோர் காளத்தி ஞானப்பிரகாசத்தைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.

    சீனிவாசனும், வேணுகோபாலன் கோவிந்தராஜன் என்ற பெயர்களுடன் கண்ணனும் உள்ளனர். ராமன் பிரதிட்சை செய்து பூஜித்த லிங்கம் ராமச் சந்திரலிங்கம் என்ற திருநாமத்துடன் உள்ளது.

    சீதை, அனுமன், பரதன் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் ராமன் சீதை உருவங்களும் உள்ளன. ராமனுக்கு அருள் புரிந்த காளத்தீஸ்வரர் ராமேஸ்வர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் உள்ளார். இந்த லிங்கம் வெண்மையாக உள்ளது.

    பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் பிரதிட்டை செய்து பூஜித்த லிங்கம் தருமலிங்கம் என்ற பெயருடன் திகழ்கின்றது. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஆறு ஆதாரச் சக்கர லிங்கங்களும் ஐந்து முகம் கொண்ட பஞ்சானன லிங்கமும் பூஜை செய்வதற்கு மிகச் சிறப்பாக விளங்குகின்ற ஸ்படிக லிங்கமும் உள்ளன. பின்புறம் எரிந்து கொண்டிரக்கும் விளக்கினால் ஸ்படிக லிங்கத்தில் அடிமுடியில்லாத ஜோதி தரிசனம் கிடைக்கின்றது.

    திருக்காளத்திக் கோவிலுக்குக் கல்லாலமரம், வில்வ மரம் ஆகியவை தலமரங்களாகவும் பொன்முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி நதி புனிதத் தீர்த்தமாகவும் விளங்குகின்றது. காளத்தி நாதர்த் திருக்கோயில் கோபுரங்களையும் மண்டபங்களையும் பிரகாரங்களையும் பலப்பல சன்னதிகளையும் கொண்டுள்ள பெரிய கோயிலாகும்.

    சோழர், பாண்டியர், விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், நகரத்தார் ஆகியோர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நூற்றியெட்டு லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் ஆகியவற்றோடு சோழலிங்கம், பாண்டிய லிங்கம், தெனாலி லிங்கம் ஆகிய லிங்கங்களும் உள்ளன.

    இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த ராமநாதன் செட்டியாரின் ஆள் உயரச் சிலையும் கோவிலில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய திருப்பணிக்கான திட்டம் வகுத்து அது அவருடைய வாழ்நாளுக்குள் முற்றுப் பெறாமல் நின்று போய் விட்டது என்பதைக் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோபுரம் தெரியப்படுத்துகின்றது.

    கோவிலின் உள்ளே கல்வெட்டுக்களால் நிரம்பிய காசி விஸ்வநாதர்க் கோவில் மிகவும் சிதலமடைந்து உள்ளது. கொடி மரத்திற்கு அருகே பலிபீடம் லிங்கம் ஆகியவற்றை எட்டு யானைகள் சுமந்து நிற்பது போல் அமைந்துள்ளன. அருகே யோகியுடன் கூடிய சிறிய லிங்கம் உள்ளது.

    ஓங்கார வடிவமாகிய லிங்கத்தில் மகரப் பகுதியாகிய பீடமும் உகரப் பகுதியாகிய ஆவுடையாரும் இல்லாமல் அகரப் பகுதியாகிய பாணம் மட்டுமே உள்ள லிங்கமும் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சன்னதியும் மற்றும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பத் தூண்களுடன் கூடிய லிங்க சன்னதிகளும் சிலந்தி, யானை, பாம்பு ஆகியவை சிவபூஜை செய்யும் திருக்காளத்தில் தல வரலாற்றைக் காட்டுகின்ற தனிச் சன்னதியும் உள்ளன.

    திரும்பிய பக்கமெல்லாம் சன்னதிகள்

    திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானுக்குக் காட்சி தந்தருளிய பரமனின் திருவடிகளுக்குச் சன்னதியுள்ளது போன்று திருக்காளத்தியிலும் ஈசன் திருவடிகள் காணப்படுகின்றன. திருவடிச் சன்னதியில் திருவடிகளுக்கு முன்பு நந்தியும் எழுந்தருளியுள்ளது.

    ஒருபுறம் விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்துள்ளது போன்றே மறுபுறம் மலையேறும் பாதையுள்ள கோபுரத்தின் அருகே மணிகங்கை என்னும் பொன் முகலி நதியைத் தோற்றுவித்த மணிகங்கேசர்க் கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. உள்ளிருக்கும் மண்டபத்தின் சுவர்களில் பாம்பு சிலந்தி யானை ஆகியவை வாயுலிங்கப் பொருளை வழிபடுவதைக் காட்டும் வண்ண வண்ண அழகிய ஓவியங்கள் சிதைந்து போயுள்ளன.

    இந்த மண்டபத்தில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் மேலே நான்கு முக லிங்க சன்னதி உள்ளது. நான்கு முகங்களையும் நன்றாகச் தரிசனம் செய்யும் வகையில் நான்கு புறமும் சிறு சிறு சாளரங்கள் உள்ளன. எல்லாச் சிவலாயலங்களிலும் உள்ளது போல் திருக்காளத்தீஸ்வரர்க் கோவிலிலும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    பெரிய நடராஜர், சிறிய நடராஜர் என்று இரண்டு ஆடல்நாயகன் திருவுருவங்கள் உள்ளன. அறுபத்து மூவர் சன்னதியோடு திருமுறைச் சன்னதியும் உள்ளது. நந்தியும் சண்டீசரும் பைரவரும் தங்கள் தங்கள் பதவிக்கு ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபாக உள்ளது.

    பிரம்மன் சிரம் அரிவதற்காக பைரவரைத் தோற்றுவித்த பைரவநாதர் எனப்படும் சிவ பைரவரும் வேட்டை நாய்கள் சூழத் தனிச் சன்னதியில் எதிரே நந்தியோடு எழுந்தருளியுள்ளார். பிரணவப் பெருமாள் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் இந்தக் கோலத்தைப் போற்றியுள்ளார்.

    சுந்தர கணபதி, பாலகணபதி, வல்லப கணபதி, இலக்குமி கணபதி, உக்தி கணபதி, பூத கணபதி, சக்தி கணபதி என்று பலப்பல விநாயகர் திருவுருவங்களும் சன்னதிகளும் உள்ளன. இவையே யன்றி பாதாள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது போன்று குறுகலான படிகள் வழியே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    உடுப்பி பால சுப்பரமணியர் சன்னதி, முருகன் சன்னதி என்று முருகனுக்குச் சன்னதிகள் உள்ளன.

    திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகப்பெருமானுக்கு ஆதியண்ணாமலையார்க் கோவில் கோவில் இருப்பது போன்று காளத்தியில் மலையுச்சியில் குடுமித் தேவரின் திருக்காட்சி பெற்ற கண்ணப்பருக்கு கோவில் உள்ளது. மலையுச்சியில் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள குடுமித் தேவரை சிவகோசரியார்எ ன்ற முனிவரும் கண்ணப்பரும் வழிபட்டனர்.

    பதினாறே வயதான கண்ணப்பர் முதல் முறையாக வேட்டைக்குச் சென்ற போது மலைமேலுள்ள குடுமித் தேவரைக் கண்டு ஆராத அன்பு கொண்டு அங்கேயே தங்கி விட்டார். ஆறு நாட்கள் உணவும் உறக்கமும் இன்றி சதாசர்வ காலமும் சிவ நினைவோடு குடுமித்தேவரின் அருகே இருந்தார்.

    ஒரு உறுப்புக்கு மாற்று உறுப்பு வைத்து சிகிச்சை செய்யும் மருத்துவம் உள்பட பல விதமான கலைகளையும் பதினாறே வயதான கண்ணப்பர் கற்றுத் தேர்ந்ததை Ôகலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்குÕ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றுகின்றார். வேறு யாருக்குமே இருக்க முடியாத இறையன்பினைக் கண்ணப்பர் கொண்டிருந்ததை இறைவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

    திண்ணன் ஈசனுக்குக் கண்டு அப்பியதால் கண்ணப்பன் என்று பெயர் பெற்றார். திருமாலும் இறைவனுக்குத் தாமரை மலராகத் தன் கண்ணை வைத்துப் பூஜை செய்ததால் தாமரைக் கண்ணன் என்று பெயர் பெற்றார். இருவருடைய வழிபாட்டிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது.

    விஷ்ணுவின் வழிபாடு பிரதிபலனை எதிர்ப்பார்த்து. பரம்பொருளிமிருந்து சுதர்சனச் சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபூஜை செய்தார். சிவபூஜை தடைப்பட்டு விட்டால் சக்கரம் கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் பூஜையைத் தடையின்றி முடிப்பதற்காக குறைந்து போன தாமரை மலருக்குப் பதிலாகத் தன் கண்ணைப் பறித்து வைத்து அதிர்த்துப் பூஜையை முடித்தார். இத்தகைய அன்பினை, பக்தியை எல்லோரிடத்திலும் காண முடியும்.

    ஆனால் கண்ணப்பர் வழிபாடு செய்தது இறைவனுக்காக எந்தவிதமான பிரதிபலனும் கருதாது ஈசனுக்காக தன் ஒரு விழியை மட்டுமன்று இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். இத்தகைய பக்தியை யாரிடத்திலும் காண முடியாது.

    தாட்சாயிணியாக, பார்வதியாக, மீனாட்சியாகப் பிறந்து வளர்ந்த போதும் மற்றும் காமாட்சி, விசாலாட்சி என்று எந்தப் பெயரில் எங்கு வந்த போதும் பல்லாண்டுகள் தவமும் பூஜையும் செய்த பின்புதான் பராசக்தியால் பரமேஸ்வரனைக் காண முடிந்தது. பரம்பொருளைக் கணவனாக அடைய வேண்டும், குற்றம் குறை நீங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

    ஆனால் கண்ணப்பரோ ஆறே நாட்களில் அகிலாண்டேஸ்வரரின் திருக்காட்சி கண்டு அவனது திருக்கரத்தால் தீண்டப் பெறும் பெறுதற்கு அரிய பெரும் பேறு பெற்றார். அவருடைய தன்னலமில்லாத பக்தி, இறைவனுக்காக இறைவனை வழிபட்ட மெய்யன்பு ஆயிரம் ஆண்டுகள் தேடித் திரி¢ந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாத பரமேஸ்வரனது திருக்காட்சியை ஆறே நாட்களில் கூட்டு வித்தது. மீண்டும் வந்து பிறக்காத பேரின்ப முக்தியையும் அருளச் செய்தது.

    கண்ணப்பரைப் போற்றாத பக்தர்கள் இல்லை எனலாம். சங்கப் புலவர்களின் பாடல் முதல் தற்காலத்துக் கீர்த்தனைகள் வரை கண்ணப்பர் போற்றப்படுகின்றார். கிடைத்துள்ள தேவாரத் திருமுறைகளை நோக்கும்போது ஏழு வயது வேதியர் சண்டீசரும் பதினாறு வயது கண்ணப்பருமே மிக அதிகமாகப் போற்றப்பட்டுள்ளனர்.

    மலையுச்சியில் உள்ள கண்ணப்பர்க் கோவிலில் ஆள் உயரப் பெரிய கண்ணப்பருக்கு அருகே அப்புனிதப் பெருமனைப் பெற்றெடுத்து உலகத்திற்குத் தந்த தாயாரின் சிறிய உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. கண்ணப்பர் சிவகோசரியார் வழிபட்ட லிங்க மெய்ப்பொருள் இன்றும் வில்வ மரத்தடியில் திறந்த வெளியிலேயே உள்ளது.

    கண்ணப்பருக்கும் சிவகோசரியாருக்கும் திருக்காட்சி தந்த காட்சியருளிய நாதர்க் கோவிலும் கண்ணப்பர்க் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. மலையுச்சியில் மட்டுமன்றி கீழே ஞானப்பிரகாசம் எழுந்தருளியுள்ள அடிவாரக் கோவிலில் கொடி மரத்திற்கு அருகேயும் கண்ணப்பர் உள்ளார்.

    காளத்திக் கணநாதரை தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அஞ்ஞானம் விலகுகின்றது. தீராத நோய் தீர்கின்றது. பிறவிப் பிணி நீங்கிப் பிறவாப் போரின்பம் உண்டாகின்றது. எல்லாவிதமான கிரக தோஷங்களும் குற்றங்குறைகளும் நீங்குகின்றன.

    • பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கம் `லோபாவி' என்னும் இடத்தில் உள்ளது.
    • ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.

    பரத்வாஜர் ஒரு தடவை தன் சீடர்களுடன் சொர்ணமுகியில் நீராடி, ஆனந்தத்தை நல்கும் வாயுலிங்கத்தை பக்தியோடு தொழுதார். அவர் தியான நிலையில் ஆழ்ந்திருந்த போது, எத்தகைய இனிமையானது என்று விவரிக்க முடியாத ஒரு தெய்வீக வசனம் அவர் காதுகளில் ஒலித்தது.

    `ஓ பரத்வாஜரே! இவ்விடத்தில் சமீபத்தில் தெற்குப்புறமாக ஜீவன்முக்தி அளிக்கவல்ல சாச்வத தலத்தினை அடைந்து வேதங்களின் பாகமாக இருக்கும் `ஸ்ரீருத்ரத்தை' உச்சரித்து என்னை வழிபடுவாயாக. எமது பக்தர்களின் வழிபாட்டிற்காக அவ்விடத்தில் ஒரு லிங்கமும், தீர்த்தமும் இருக்கின்றது என்று காதுகளில் கேட்டது.

    இதை கேட்ட பரத்வாஜர் மெய்சிலிர்த்து தம் சீடர்களுடன், இறைவன் சுட்டிக்காட்டியு-ள்ள தலத்திற்கு விரைந்தார். அங்குள்ள தூய்மையான தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள லங்கத்தை வணங்கி ஆராதித்தார். அப்போது உடனே பரமேஸ்வரன் அவருக்கு காட்சி அளித்தார்.

    பக்தி பரவசத்தால் நெகிழ்ந்து போன பரத்வாஜ், ஈசனே உம்மை வணங்குகிறேன். ஓ! பரமேஸ்வரரோ! உம்மை பிரார்த்திக்கிறன். இந்த அண்ட சராசரத்திற்கும் காரணமான முதலோனே! வேதங்களினால் புகழப்படுவோனே! அனைத்து செயல்களிலும் உறைந்து முழுமுதலாகி நிற்போனே! உமது கருணையினால் நான் ஞானம் பெற்றவனானேன். எனது வணக்கங்களை ஏற்றுக் கொண்டு எமக்கு அருள் செய்வீராக! என கண்ணீர் மல்க கூறி நின்றார்.

    அவரது பக்தியால் மனம் இரங்கிய ஈஸ்வரனும், லிங்கோத்பவரை குறித்து எடுத்துக்கூறி அவரை ஞானம் பெறச் செய்தார். முனிவரால் வழிபட்ட லிங்கமும், உபயோகிக்கப்பட்ட தீர்த்தமும் இனி அவரது நாமம் கொண்டே விளங்கட்டும் என திருக்காளத்தீஸ்வரர் அறிவித்தார். மேலும் அவ்விடத்தில் இறைவனை வழிபடுபவர்கள் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மோட்சமென்னும் சாம்ராஜ்யத்தை அடையப் பெறுவர் என்றும் கூறி மறைந்தார்.

    மகாதேவன் அருளால் பரத்வாஜ முனியின் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகி அவர் தன் நிலை உணர்ந்தவராய் மனஅமைதி அடைந்தார்.

    ரோமச முனிவரும், சொர்ணமுகி நதியில் நீராடி திருக்காளத்தீஸ்வரரையும், திருஞானப்பிரசுனாம்பிகையையும் தரிசனம் செய்தார். பின்னர், தெற்குப்புற வாயிலில் தட்சிணாமூர்த்தி சிலைக்கு எதிராக முதலில் தர்பை புல்லினை பரப்பி அதன் மீது மான் தோலினை விரித்து, அதன் மீது பத்மாசன நிலையில் அமர்ந்து, தன் உடல், தலை, கழுத்து ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தி, கண்கள் மூக்கின் நுனியையே கூர்ந்து நோக்க, அவர்தம் மனதை அடக்கி, இறைவனை குறித்து தியானம் செய்தார்.

    அவர் மனம் மிக உன்னதமான அமைதி நிலை அடையப்பெற்றது. `நிர்விகல்ப சமாதியினை' அடைந்தார். இறைவனது சிருஷ்களில் அனைத்து உயிருள்ள ஜீவன்களிளும், ஜடப் பொருள்களிலும் இறைவன் உறைந்திருப்பதை உணர்ந்தார் முனிவர். அனைத்து இடங்களிலும், ஏன் நம்மிலும் கூட சிவனையே கண்டார்.

    இறுதியாக தான் என்பது வேறு யாருமல்ல. மிக உன்னதமான ஆத்மாவேயாகும் என்பதனை உணர்ந்து கொண்ட அவரது அசைவற்ற நிலையிலுள்ள உதடுகள் `சிவவோஹம்' என உச்சரித்தது. அது அக்கோவில் முழுவதும் சிவோஹத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல் தோன்றியது. முனிவரிடம் இருந்து ஒரு ஜோதி எழும்பி திருக்காளத்தீஸ்வரருடன் ஐக்கியமானது.

    இக்கதைகளை யார் பக்தியுடன் இறைவன் முன் அமர்ந்து அல்லது பில்வ மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு படிக்கின்றனரோ அவர்கள் ஆரோக்கியமும், செல்வ பலமும் பெற்று அறிவாளிகளாக திகழ்வார்கள். இவ்வுலக வாழ்க்கையினை துறக்கும் போது மோட்சத்தை அடைவார்கள் என்பது உறுதி.

    பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கமும், தீர்த்தமும் `லோபாவி' என்னும் இடத்தில் இப்போதும் காணப்படுகின்றது. ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.

    காளஹஸ்தி தலத்துக்கு செல்பவர்கள் இந்த லிங்கத்திடமும், ஜீவசமாதி பகுதியிலும் மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். அது அளவற்ற பலன்களை வாரி வழங்கி, உங்கள் வாழ்வை மேம்படுத்தும்.

    இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    கோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியலூர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ஆந்திர மாநிலம் முன்னொரு காலத்தில் ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.
    ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

    அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன.

    இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
    தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். அவரும் பற்பல சாந்தியங்களுடன் கூடிய சிவலிங்கங்களை அவர்களுக்கு செய்து கொடுத்தார். அதைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தேவர்கள் அனைவரும் பயனடைந்தனர். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    இந்திரன் - பதுமராக லிங்கம்

    அசுவினி தேவர்கள் - மண்ணால் ஆன லிங்கம்

    எமதர்மன் - கோமேதக லிங்கம்

    சந்திரன் - முத்து லிங்கம்

    பிரம்மன் - சொர்ண லிங்கம்

    வருணன் - நீல லிங்கம்

    வாயுதேவன் - பித்தளை லிங்கம்

    விஷ்ணு - இந்திர லிங்கம்

    நாகர்கள் - பவள லிங்கம்

    ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்

    குபேரன் - சொர்ண லிங்கம்

    மகாலட்சுமி - நெய்யால் ஆன லிங்கம் 
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம்.
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன்.

    பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

    தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

    அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

    ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.
    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். சகல மங்களங்களும் உண்டாகும்.

    ஸ்ரீகணேஸாயநம:
    1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
    நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
    ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
    காமதஹம்கருணாகர லிங்கம்I
    ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
    புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
    ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
    பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
    தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    5: குங்குமசந்தனலேபித லிங்கம்
    பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
    ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
    பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
    தினகரகோடிப்ரபாகர லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
    ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
    அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
    ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
    பராத்பரம் பரமாத்மக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
    ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

    மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
    எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
    ×