search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்மவினை"

    • அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள்.
    • ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது.

    மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது.

    உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

    பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

    அவரைப் பார்த்த பீஷ்மர், `மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?' என்றார்.

    அதற்கு வியாசர், `பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.'

    பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், `இதற்கு என்ன பிராயச்சித்தம்?' என்று வியாசரிடம் கேட்டார்.

    `பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது.

    என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி' என்றார் வியாசர்.

    அதையடுத்து பீஷ்மர், 'என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்கு சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்' என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.

    வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, 'பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் `அர்க்க பத்ரம்'. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்' என்றார்.

    அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

    அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், 'வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.

    ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்' என்று ஆறுதல் சொன்னார்.

    ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.

    • மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
    • தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.

    மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.

    பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

    இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

    • பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.
    • திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.

    பெண் பாவம் தீர்க்கும் திருவிசநல்லூர்

    திருவிசைநல்லூர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திற்கு கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.

    திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

    திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.

    திருவிசைலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசைநல்லூர் என்றும் அழைக்கின்றனர்.

    திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார்.

    எட்டு சிவ யோகிகள் லிங்கத்துடன் இணைந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    இந்த சன்னதி நான்கு பைரவர்களில் ஒருவரான சதுர் கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

    இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன.

    இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

    பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.

    நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் மரண பயம் நீக்கும் திருத்தலமாவும் கருதப்படுகிறது.

    • எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.
    • மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    மரண கண்டம் நீக்கும் திருநீலக்குடி

    ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய கோயில், எது தெரியுமா?

    கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்".

    மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.

    ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத்தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

    எம, மரண பயங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

    திருநாவுக்கரசர் இத்தலப்பெருமானைப் பின்வருமாறு போற்றிப் பாடுகிறார்.

    "வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்

    செத்த போது செறியார் பிரிவதே

    நித்த நீலக் குடியர னைந்நினை

    சித்த மாகிற் சிவகதி சேர்திரே"

    • கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,

    பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    எனவே செல்வம் பெற விரும்புபவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
    • அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்

    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".

    இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.

    நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.

    கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.

    இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    • ஒருவர் செய்யும் பாவ காரியத்திற்கு ஏற்ப கஷ்டம் வரும்.
    • அதிலும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷம்.

    எதையும் தாங்கும் இதயம் தரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்

    வாழ்விலே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்.

    அதை அமல்படுத்தும் நீதிதேவன் சனீஸ்வரன் முற்பிறவியில் செய்த கர்மத்திற்கு இப்பிறவியில் கோச்சாரம் லக்கினம் பார்த்து பலன் அளிக்கிறார்.

    நள மகாராஜா சனி கிரஹ தோஷத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டானோ தோஷ நிவாரணம் ஆனதும் அவ்வளவு சுபிட்சத்தை பெற்றான்.

    ஆகவே ஒருவர் செய்யும் பாவ காரியத்திற்கு ஏற்ப கஷ்டம் வரும். கஷ்டம் நீங்க சனீஸ்வரனை வழிபட்டால் உடனடியாக கஷ்டத்தை நீக்கிவிடமாட்டார்.

    அதை தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைத் தருவார்.

    குறிப்பிட்ட காலம் வந்ததும் சுபிட்சம் தருவார். இதுதான் வாழ்வியலின் தத்துவம்.

    அந்த வகையில் சனிப்பெயர்ச்சியிலும் சாதகமும், அவரவர் ராசிப்படி அமையும். பாதிப்பு வரும் ராசிக்காரர்கள் சனீஸ்வரனை வழிபட்டு வருமுன் காக்கும் தெளிவினைப் பெற வேண்டும்.

    திருநள்ளாறு சனீஸ்வரன் தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் உபசன்னதியில் இருக்கிறார்.

    ஆனால் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனிபகவான் தனிக் கோவில் கொண்டுள்ளார்.

    அதிலும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷம்.

    குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோவில் நான்கு புறமும் பசுமைபாடும் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் முன்பு சுரபி நதி என்னும் ஜீவநதி பாய்ந்தோடுகிறது.

    அந்த நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, காக வாகனத்தை தலையைச் சுற்றி, காக மண்டபத்தில் வைத்து அர்ச்சனை செய்து சனீஸ்வரனை வழிபடுவர்.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் அமைக்கப்பட்டுள்ளன.

    நவகோள்கள் இயக்கத்தில்தான் மானிட இனம்,விலங்கினம், பறப்பன போன்ற இனங்களும் வாழ்கின்றன.

    சூரியன் இயங்கவில்லை என்றால் வையகத்தில் மழை இல்லை, வெளிச்சம் இல்லை.

    அதே போல சனி கோள் நீதி தேவனாக செயல்படுகிறது.

    முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து பலனை கொடுக் கிறார்.

    அதே போல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினரை பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார்.

    குச்சனூர் சுயம்பு சனீஸ்வரனை வழிபட்டால் எதையும் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார்.

    • இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
    • முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    திருமண தடை நீக்கும் முத்துக்குமாரசாமி கோவில்!

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.

    முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.

    சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையொட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்புபலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது.

    பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி,பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவின் போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார்.

    இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.

    இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    • மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர்
    • குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    எதிரிகள் தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர்

    இரணியனை வதம் செய்வதற்காக சிம்ம முகம், மனித உடலுடன் மகாவிஷ்ணு ஒரு தூணில் இருந்து வெளிப்பட்டார்.

    மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர் என பெயர் பெற்றார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள்பாலிக்கிறார்.

    முற்காலத்தில் நரசிம்ம பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் நரசிம்மருக்கு கோயில் கட்ட விரும்பினர்.

    எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்கு தெரியவில்லை.

    இவ்வேளையில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர்.

    பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

    ஆனால் சுவாமிக்கு 'நரசிம்மர்' என்று பெயர் சூட்டினர்.

    பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

    இங்குள்ள ஒரு தூணில் படைப்புச் சிற்பமாக சிவலிங்கம் உள்ளது.

    குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    கார்த்திகை பவுர்ணமியன்று விசேஷ பூஜை நடக்கும். ஆயுள் அதிகரிக்க, திருமண தடை நீங்க சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.

      இழந்த செல்வம் மீட்டு தரும் தென்குரங்காடுதுறை

      ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

      சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.

      வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.

      வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் "தென்குரங்காடுதுறை" என்றானது.


      ×