என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேடசந்தூர்"

    • மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அய்யர் மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி தோப்புபட்டி, குன்னம் பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர்,

    சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
    • பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    4 ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளனர். 2 பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் அருகிலேயே சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து பணியாளர்கள் இருவரும் தப்பி வெளியே ஓடி வந்தனர்.

    அருகிலேயே பள்ளிக்கு வந்த 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு தூரமாகச் சென்று விட்டனர். தீ பிடித்த சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சமையலறை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சுக்கு நூறானது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கு முன்பாகவே இந்த விபத்து நடைபெற்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு மாற்று இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    • மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர்
    • குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    எதிரிகள் தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர்

    இரணியனை வதம் செய்வதற்காக சிம்ம முகம், மனித உடலுடன் மகாவிஷ்ணு ஒரு தூணில் இருந்து வெளிப்பட்டார்.

    மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர் என பெயர் பெற்றார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள்பாலிக்கிறார்.

    முற்காலத்தில் நரசிம்ம பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் நரசிம்மருக்கு கோயில் கட்ட விரும்பினர்.

    எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்கு தெரியவில்லை.

    இவ்வேளையில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர்.

    பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

    ஆனால் சுவாமிக்கு 'நரசிம்மர்' என்று பெயர் சூட்டினர்.

    பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

    இங்குள்ள ஒரு தூணில் படைப்புச் சிற்பமாக சிவலிங்கம் உள்ளது.

    குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    கார்த்திகை பவுர்ணமியன்று விசேஷ பூஜை நடக்கும். ஆயுள் அதிகரிக்க, திருமண தடை நீங்க சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.

    • கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார்.
    • உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி (வயது 100). கடந்த 1923ம் ஆண்டு ஆக.15-ல் பிறந்த இவர் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 1 மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வேடசந்தூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    ×