என் மலர்
நீங்கள் தேடியது "யாருக்கு மறுபிறவி கிடையாது"
- பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
- உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உண்டா?
மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஆனால், ஒரு பிறவிலேயே நாம் படாதபாடு படுகிறோம். இக்காலத்தில் யாரிடமாவது உனக்கு இன்னொரு பிறவி வேண்டுமா என்று கேட்டால் போதும்டா சாமி..! ஆளவிடுங்க என்று தெரித்து ஓடும் சூழல்தான் இருக்கிறது.
அதனால், மீண்டும் எனக்கு மனிதனாக பிறக்கவே வேண்டாம்.. பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
இப்படி பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
முற்பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பிறவியிலும் பாவம் செய்தால், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும், இது தொடர்கதை ஆகும்..
எப்பிறவியில் பாவம் செய்யாமல், நேர்வழியில் பக்தி மார்க்கத்துடன் இணைந்து இருக்கிறானோ, அப்பிறவியில் அவனுடைய பிறவி முடிவடைகிறது.
இறைவனின் விழிகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனை என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது.
மறுபிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், 108 வில்வ இலைகளில், "ஓம் நமச்சிவாய" என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரத்தை எழுதி, லிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும்.
கண் குளிர சிவபெருமானை தரிசித்து, மனதார "இப்பிறவி போதும், இனி பிறவா நிலை வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
48 பிரதோஷங்கள் காளை மாட்டிற்கு அருகம்புல் தானம் செய்பவர்களுக்கு, பிறவா நிலை வரும். இப்பரிகாரங்களை செய்து வந்தால், அப்பிறவியிலேயே அவர்களுக்கு மோட்சம் பக்தி மூலமாக உண்டாகி, மறுபிறவி என்பதே கிடையாது என்பது ஐதீகம்.
- மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
- தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.






