search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kulasekaram"

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    குலசேகரத்தில் 2 பெண்களை வெறிநாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    குலசேகரம்:

    குலசேரகம் அரசமூடு விளையாட்டு மைதானம் பகுதியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த கழிவுகளை உண்பதற்காக இந்த பகுதியில் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றித்திரிவது வழக்கம். இவற்றில் பல நாய்கள் வெறிபிடித்து அலை கின்றன. மேலும் இந்த வெறி நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றாலும் இதுவரை அந்த வெறி நாய்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் இந்த வெறி நாய்கள் கடித்து 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குலசேகரம் காவஸ்தலம் தொட்டிப்பாலம் செட்டி தெருவை சேர்ந்தவர் கீதாமணி (வயது 60). இவர் தொட்டிப்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு வெறி நாய் அவரை விரட்டி, விரட்டி கடித்தது.

    இதில் அவருக்கு கை உள்பட உடலில் பல இடங் களில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து வெறி நாயிடம் இருந்து அவரை காப்பற்றினார்கள். அங்கிருந்து தப்பியோடி அந்த வெறி நாய் அதே பகுதியை சேர்ந்த வசந்தா (65) என்ற பெண்ணையும் கடித்து குதறியது. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் அந்த வெறி நாய் கடித்தது.

    வெறி நாயின் அட்டகாசத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நாயை அடித்து கொன்றனர். வெறி நாய் கடித்த பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சாலையில் திரிந்த நாய்களும் வெறி நாயால் கடிக்கப்பட்டுள்ளதால் அந்த நாய்களும் வெறி நாய்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் பகுதியிலும் பல வெறி நாய்கள் சுற்றித்திரிவதால் இவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெறி நாய்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×