search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadalur"

    • 20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.
    • வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    ஸ்தல வரலாறு

    கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது.

    20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.

    பெருமாள் கடலில் குளித்து விட்டு அந்த குன்றின் மீது வந்து அமர்ந்ததாகவும் அப்போது தனது வலது கையில் உள்ள சக்கரத்தை அங்கு வைத்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் கோவில் சுயயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது.

    கோவிலில் உள்ள சக்கரம் 3 அடி உயரம் உள்ளது.

    இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 1 அடி உயரம் மட்டுமே இருந்தாகவும் அது தானாக வளர்ந்து இப்போது இந்த உயரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    கோவிலில் சித்திரை வருட பிறப்பின் போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

    ஆனி மாதத்தில் சுதர்சன ஜெயந்தியும், சிறப்பு யாகமும் நடக்கின்றன.

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமை கருட வாகனசேவை மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    தைமாதம் 3-ம் வெள்ளி, 5-ம் வெள்ளி கிழமைகளில் அரசு-வேம்பு திருக்கலயாணம் நிகழ்ச்சியும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் வழிபடும் போது ஒவ்வோரு விசேஷ பலன் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

    செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இடப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும், வியாழக்கிழமை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும், கல்வி யோகமும் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    குழந்தை இல்லாதவர்களும், திருமணதடை உள்ளவர்களும் வெள்ளிக்கிழமை வழிபட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பில்லிசூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை வழிபட்டால் அவர்கள் பிரச்சினை தீரும்.

    • இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
    • முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    திருமண தடை நீக்கும் முத்துக்குமாரசாமி கோவில்!

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.

    முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.

    சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையொட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்புபலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது.

    பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி,பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவின் போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார்.

    இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.

    இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×