search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்த்தநாரீஸ்வரர்"

    • ரிஷிகள் வந்த வனம் என்பது மருவி 'ரிஷிவந்தியம்' என அழைக்கப்படுகிறது.
    • சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார்.

    பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் `ரிஷிகள் வந்த வனம்' என்பது மருவி ரிஷிவந்தியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேதா அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமலை நாயக்கரால் புதுப்பித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்த கோவிலில் திருமலைநாயக்கரின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தது. அப்போது தென் திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை செல்ல சிவபெருமான் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்டினார். அப்போது 'எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்' எனக்கூறி மறைந்தார்.

    விஜயநகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக சிலர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம் தான் மூலவர் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்தக் கோவில் துவாபாரயுகத்தில் தோன்றியது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

    இங்கு வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும். பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார்.

    குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையில் இருந்து பல தலங்களை தரிசித்து விட்டு ரிஷிவந்தியம் வழியாக சிதம்பரம் சென்றார். அவ்வாறு செல்லும்போது, அவருக்கு பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, `தாயிருக்க பிள்ளை சோறு' என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி 'நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூறினார்.

    இதையேற்று குக நமசிவாயரும் அதன்படியே 'மின்னும்படி வந்த சோறு கொண்டு வா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகை அம்மன் பொற்கிண் ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என வரலாறு கூறுகிறது.

    தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தலத்தில் இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான்.

    தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த முத்தாம்பிகை அம்மன், ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்துவிட்டாள். பால்குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித் தான். அப்போது சிவபெருமான் இந்திரன் முன் தோன்றி, இனிமேல் முத்தாம்பிகை அம்பாளுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி கூறினார்.

    மேலும் தினமும் நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாகவும் கூறி மறைந்தார்.

    தேன் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேன் அபிஷேகத்தில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக (ஆண்பாதி. பெண்பாதி) ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போதுலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

    கோவில் அமைப்பு

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளே சென்றதும். உயர்ந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே நந்திபெருமான் காட்சி அளிக்கிறார். பின்னர் உள்ளே அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். அவரை தரிசித்து விட்டு வரும் வழியில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளன. மேலும் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர், கஜலட்சுமி, வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    அர்த்தநாரீஸ்வரருக்கு இடப்புறத்தில் முத்தாம்பிகை அம்மன் காட்சி தருகிறார். இதன் உட்பிரகாரத்தில் பெருமாள் புலி பாதங்களுடன் எழுந்தருளி இருப்பதையும் காணலாம்.

    மேலும் முத்தாம்பிகை அம்மன் சன்னிதிக்கு நவக்கிரக சன்னிதியும் உள்ளது. முத்தாம்பிகை அம்மனை தரி சித்து விட்டு வெளியே வரும்போது அருகே உள்ள மண்டபத்தில் யாளிச்சிலை ஒன்று உள்ளது. அதன் வாயினுள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அந்த உருண்டையை நம்முடைய கைவிரலால் எந்த பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால்' வெளியில் எடுக்க முடியாது. இது சிற்ப வேலைப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சிலை வடித்தவர்களின் திறமையையும் காட்டுகிறது.

    இதற்கு தென்கிழக்கு மூலையில் வசந்த மண்டபம் உள்ளது. அதில் பல்வேறு இசைகளை வெளிப்படுத்தும் சரிகமபதநி' இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாக்கள்

    இக்கோவில் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. மேலும் கோவிலில் அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையில் சாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    கோவில் புதுப்பித்து பல ஆண்டுகள் ஆவதால் கோவில் மேல்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணத்தடை நீங்கவும். குழந்தை பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் வேண்டியும் ஏராளமானோர் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும் சாமிக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அமைவிடம்

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தியாக துருகம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது. திருக்கோவிலூர், தியாக துருகம், கள்ளக்குறிச்சியில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்துகள் உள்ளன.

    • அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
    • மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்.

    பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

    இதனை, "ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்பார்கள்.

    பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்து.

    பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்று விடுவர்.

    மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

    அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அதாவது அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

    மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

    மற்ற நாட்களில் இவர் சந்நிதியை விட்டு வருவதில்லை.

    • பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
    • ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்

    சங்க நூல்களில் அர்த்தநாரீஸ்வரர்!

    அர்த்தநாரீஸ்வரர்பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார்.

    ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.

    திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன், பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில் மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும்,

    முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும் சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும் தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    துப்பில்லாத இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன. திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லாத தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    • லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம்
    • அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து,

    அர்த்தநாரீஸ்வரர்

    அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

    தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

    இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

    இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைக் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

    பரமாத்மா, ஜிவாத்மா, போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

    இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம், அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம், லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,

    பெண் ஆண் அலி எனும் பெற்றியன்

    பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை என்று போற்றுகிறார்.

    பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.

    மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.

    திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.

    இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.

    தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.

    அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.

    அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உருவைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.

    தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.

    இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.

    பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.


    • சுவாமி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா வருதல், மாலையில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படிதாரர்களான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அவர்களது தெருவில் உள்ள பாலசந்திர விநாயகர் கோவிலில் 6 மணி அளவில் அம்மையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அம்மையப்பர் எழுந்தருளினார். சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணிக்கு கோவிலை வந்தடைந்து. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் குடும்பத்தினர்கள், கோவில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, வாசுதேவநல்லூர் நகரப் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைவர் கு.தவமணி, நாடார் உறவின்முறை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களான உபயதாரர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தக்கார் முருகன் தலைமையில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் போலீசாரும், வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் தீயணைப்பு படையினரும் செய்திருந்தனர்.

    ×