search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Memorial"

    • ‘உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • ‘புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன.

    சென்னை:

    இந்திய அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணத்தை தழுவினார். தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பமாக இருந்தது.

    ஆனால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றனர். அனுமதி ஆணை பெற்று, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளது. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சமாதியில் 'ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்' என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன.

    பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுக்கும் பூச்செடிகள், பளபளக்கும் மார்பிள்ஸ் கற்களுடன் திராவிட கட்டிட கலையில் கருணாநிதியின் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவரது சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் 'லேசர்' மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கருணாநிதி சமாதியை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கருணாநிதி எழுதிய புத்தகங்களின் பெயர்கள் 'க' என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தின் இலச்சினை ஆகும்.

    அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றதும் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... ' என்ற கருணாநிதியின் காந்த குரல் வாசகம் பளிச்சென்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 'தாயின் பாசமும், தனயனின் நேசமும்' என்ற தலைப்பில் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் இருக்கும் புகைப்படம் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளது.

    'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கருணாநிதியின் இறுதிப்பயண புகைப்படங்களும், 'அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன.

    மேலும் இந்த அறைக்குள் நுழைந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கருணாநிதி 23.11.1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று பிறப்பித்த அரசாணையும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    'உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு '3 டி' தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது. கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது.

    'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 'கலைஞரின் சிந்தனை' சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் 'ஏ.வி.' தொழில்நுட்பத்தில் கருணாநிதி பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. 'புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன. சரியான பதிலை சொல்பவர்களை கருணாநிதியே பாராட்டுவது போன்று குரல் ஒலிக்கிறது. கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் 'டிஜிட்டல்' திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இந்த அறையில் 9¼ அடி உயரத்தில் கருணாநிதியின் மெழுகு உருவச்சிலையும் அமைய இருக்கிறது.

    'கலையும், அரசியலும்' என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி தியேட்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. 60 அடியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி தனது 14 வயதில் தமிழ் கொடி ஏந்தி இந்தி எதிர்ப்பு போராட்டம், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் அரவணைப்பு, அவருடைய மரணம் வரையிலான வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

    இதில் அவர் இயக்கிய, வசனம் எழுதிய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்த தகவல்களும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற காட்சிகளும் வருகின்றன. இந்த குறும்படம் கருணாநிதியின் புகழையும், சாதனைகளையும் போற்றி பாராட்டும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, வள்ளுவர்கோட்டம், அண்ணா மேம்பாலம், குடிசைமாற்று வாரியம், டைட்டல் பார்க், பாம்பன் பாலம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, அண்ணா நூலகம், மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பாதைகளில் பளிச்சிடுகின்றன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் பூங்கா போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்ற தலைப்புகளில் கருணாநிதியின் புகழ் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பறைசாற்றப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்கள் திகட்ட, திகட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கருணாநிதியுடன் நேரில் பழகியது போன்ற உணர்வு உண்டாகும் வகையில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தவுடன் நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்துதான் பார்வையிட முடியும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். முன்பதிவு விவரத்தை இங்கு அமைந்துள்ள சேவை கட்டிட அலுவலகத்தில் காட்டினால் கையில் 'டேக்' கட்டி விடுவார்கள். அதன்பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம். கருணாநிதி அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தின் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் ' என்றார்.

    • அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த கட்டுமானப் பணி கள் 97 சதவீதம் முடிவடைந்துவிட்டது. கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து அண்ணா நினைவிடமும் புதுப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும்.

    மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

    ஓரிரு மாதங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
    • முகப்பில் பேனா வடிவிலான தூண் வைக்கப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

    கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்களும்-வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப்படங்களுடன் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் பேனா வடிவிலான தூணும் வைக்கப்படுகிறது.

    இந்த கட்டுமான பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை இன்னும் 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வடசென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம்.

    ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

    தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.

    அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

    இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நேற்று நடைபெற்றது.

    இந்த பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது சிந்தனைகள் எழுத்தோவியங்கள், இலக்கியம், கதை வசனம், அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நவீன ஒளி படங்களும் அருங்காட்சியகமாக அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது.

    2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பளவில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டடு உள்ளது.

    ஆரம்பத்தில் 40 சென்ட் நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது அதை 160 சென்ட் நிலத்தில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    நினைவிடத்தின் ஒரு பகுதியில் நூலகங்கள், டிஜிட்டல் முறையிலான காட்சியங்கள், ஒலி-ஒளி அமைப்புகள், வண்ண ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

    கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.

    இதற்காக கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    பாலத்தின் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டர், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படுகிறது. கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பினாலான இந்த கண்ணாடி பாலம் அமைய உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    தமிழ் மொழியையும் தமிழகத்தையும் போற்றும் வாசகங்கள் பிரதிபலிக்கும் வகையில் லேசர் விளக்குகளை பொருத்தவும் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நினைவிடங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கருணாநிதியின் நினைவிட பகுதிகள் மிகவும் அழகுடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
    • வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது

    கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

    வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    • சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சுரண்டை:

    சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.மொத்தம் 48 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன் சங்கர நயினார், குறுங் காவனம் வெள்ளத்துரை பாண்டியன், வைகை கணேசன்,சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், கூட்டுறவு கணேசன்,ராஜன்,எழில், சுதன்,மாரிச்செல்வி, ஜோதிடர் இசக்கி மோகன்மகேந்திரன்மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

    அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்றனர். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.
    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

    நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.



    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

    சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல. தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார்.

    தனது வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி எளிமையையும், அகங்காரம் இல்லாத குணத்தையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது சந்திப்பு எனக்கு உந்துதலாக இருந்தது.



    கோடானு கோடி மக்களின் குரலை கேட்காத அரசாங்கமாக தற்போதைய பாஜக அரசு உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை விடக்கூடாது. நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

    நான் இந்த விழாவில் பேசியதை கவுரமாக கருதுகிறேன். நான் கருணாநிதியை பற்றி பேசும்போது தமிழகத்தின் பெருமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பேசுவதாக நினைக்கிறேன். நாட்டு ஒற்றுமையை பலப்படுத்துவேன், நன்றி என தெரிவித்தார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
    சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது. கருணாநிதி தான் ஆற்றிய அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

    சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்றவர் கருணாநிதி. பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இங்குதான் திருநங்கையருக்கென வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
    சென்னை கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அண்ணா சிலையும் திறக்கப்பட்டது.



    சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினா கடற்கரை சென்றனர். அங்குள்ள அண்ணா சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர். 

    அவர்களுடன் வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு எம்.பி, கனிமொழி எம்.பி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
    ×