search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலரஞ்சலி"

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாமுக்கு மலரஞ்சலி
    • மாணவர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த ப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு அப்துல் கலாம் நினை வுகளை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். இதுபோல தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தலைவர்களின் தியாகங்கள், வாழ்நாள் அனுபவங்களை அறிந்துகொண்டு வாழ்வில் முன்னேற வாய்ப்பாக அமைகின்றது என்று குறிப்பிட்டார். ஏராளமான மாணவர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    • என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.

    என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    ×