என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian cricket team"
- விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
- நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.
பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-
என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
- இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
- இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
? Witnessing History from Dublin! ?
— BCCI (@BCCI) August 23, 2023
The moment India's Vikram Lander touched down successfully on the Moon's South Pole ?#Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN
இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.
ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-
பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?
ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.
இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.
கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.
ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.
- இலங்கைக்கு எதிரான நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
1980-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் அணி எந்த மாதிரி ஆக்ரோஷமாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியதோ? அதேபோல் தற்போதையை இந்திய கிரிக்கெட் அணி காட்சி அளிக்கிறது. அந்த கால கட்டத்தில் எந்த அணியையும், எந்த இடத்திலும் வீழ்த்தும் சக்தியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி விளங்கியது. அது மாதிரி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலிய பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது எனலாம். பெர்த் டெஸ்ட் போட்டியை தவிர அனைத்து ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர். இந்திய அணிக்கு முக்கிய பிரச்சினை டோனி தான். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பதால் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடும் நிலைக்கு தள்ளப்படுவார். தற்போதைய நிலையை பார்க்கையில் இந்திய அணியின் உலக கோப்பை பயணம் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நியூசிலாந்து தொடரில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் உலக கோப்பை பயணம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் போட்டி தொடரில் இரு அணிகள் இடையே சம அளவிலான போட்டி இருக்கும் என்று நான் நினைத்தேன். டோனி தலைமையில் முந்தைய போட்டி தொடரில் இந்திய அணி கண்ட தோல்விக்கு டோனி பழிதீர்த்து விட்டார். எல்லா போட்டியிலும் டோனியின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக கடைசி 2 ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடரை வெல்ல இந்திய அணி தகுதி படைத்ததாகும். கடந்த 12 மாதங்களாக எங்கள் அணியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. சில நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற முடியாமல் போனது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 6-ந் தேதி நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று ஓய்வு எடுத்த வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். வீரர்கள் தனித்தனியாக வந்து இணைவார்கள் என்று தெரிகிறது. #IndianCricketTeam #INDvWI
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.
கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.
இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இரண்டு உலக கோப்பையை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் பீகார்- ஜார்க்கெட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் டோனி முதல் இடத்தை பிடித்தார். 2017-18ம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் கட்டியுள்ளார். இதை பீகார்- ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை இணை கமிஷனர் நிஷாஒரான் தெரிவித்துள்ளார்.
டோனி 2013-14ம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.
பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான டோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni #Incometax
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்