search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dean Jones"

    ‘1980-ம் ஆண்டுகளில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியை போன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பாராட்டினார். #AUSvIND #DeanJones
    சிட்னி:

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    1980-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் அணி எந்த மாதிரி ஆக்ரோஷமாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியதோ? அதேபோல் தற்போதையை இந்திய கிரிக்கெட் அணி காட்சி அளிக்கிறது. அந்த கால கட்டத்தில் எந்த அணியையும், எந்த இடத்திலும் வீழ்த்தும் சக்தியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி விளங்கியது. அது மாதிரி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

    இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலிய பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது எனலாம். பெர்த் டெஸ்ட் போட்டியை தவிர அனைத்து ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர். இந்திய அணிக்கு முக்கிய பிரச்சினை டோனி தான். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பதால் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடும் நிலைக்கு தள்ளப்படுவார். தற்போதைய நிலையை பார்க்கையில் இந்திய அணியின் உலக கோப்பை பயணம் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நியூசிலாந்து தொடரில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் உலக கோப்பை பயணம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் போட்டி தொடரில் இரு அணிகள் இடையே சம அளவிலான போட்டி இருக்கும் என்று நான் நினைத்தேன். டோனி தலைமையில் முந்தைய போட்டி தொடரில் இந்திய அணி கண்ட தோல்விக்கு டோனி பழிதீர்த்து விட்டார். எல்லா போட்டியிலும் டோனியின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக கடைசி 2 ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடரை வெல்ல இந்திய அணி தகுதி படைத்ததாகும். கடந்த 12 மாதங்களாக எங்கள் அணியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. சில நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற முடியாமல் போனது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்பதை இந்தியா நிரூபித்து காட்டியது. வழக்கமாக இந்திய அணி தனது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே எதிரணியை வீழ்த்தும். ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் வெற்றியை பெற்று வருகிறார்கள். நாங்கள் எங்கள் மண்ணில் வேகப்பந்து வீச்சு மூலம் இந்திய அணியை வீழ்த்துவோம். இந்தியா சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சு மூலம் எங்களை தோற்கடிப்பார்கள். ஆனால் தற்போது தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    விராட்கோலி தலைசிறந்த வீரர். அவர் இதே உடல் தகுதியுடன் நீடித்தால் நிச்சயம் தெண்டுகரின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். இந்த கோடைகாலம் ஆஸ்திரேலிய அணிக்கு கடினமானதாக அமைந்து விட்டது. உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சவாலாக விளங்க வேண்டும் என்றால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நிலையில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார். #AUSvIND #DeanJones
    தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். #AUSvIND #DeanJones
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பு 11 முறை டெஸ்ட் தொடரில் ஆடியுள்ள இந்திய அணி ஒரு தொடரை கூட சொந்தமாக்கியதில்லை. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் இந்த தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவரான ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த முறை தொடரை வசப்படுத்தாவிட்டால், அதன் பிறகு ஒரு போதும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவை காட்டிலும் மூன்று வடிவிலான போட்டியிலும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நினைக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றவில்லை.

    பொதுவாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் தற்போது ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் களம் இறங்குகிறது. களத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் 40 சதவீத ரன்களை சேர்த்து விடும் திறமைசாலிகள். தொடர்ச்சியாக பெரும் பங்களிப்பை அளித்து வந்தனர். அவர்களை போன்று ஆடுவதற்கு யார் இருக்கிறார்கள்?

    இந்திய கேப்டன் விராட் கோலியை வார்த்தைகளால் சீண்டுவதையோ அல்லது கோபமூட்டும் வகையில் நடந்து கொள்வதையோ ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது அவரை மேலும் சிறப்பாக செயல்பட வைத்து விடும். அதற்கு பதிலாக அவருடன் இணக்கமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பேட்டிங்கில் எந்த பகுதியில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கோலி எப்போதும் ‘கவர்’ திசையில் நேர்த்தியாக ஆடக்கூடியவர். அதனால் அவருக்கு வேறு திசையில் பந்து வீசி நெருக்கடி கொடுக்கலாம்.

    இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணி எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதைய அணியும் உள்ளது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆலன் பார்டர், பாப் சிம்சன் ஆகிய இரு ஜாம்பவான்களை தவிர்த்து, மற்ற வீரர்களுக்கு அனுபவம் கிடையாது. வீரர்கள் எதிரணியை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. ஆனால் தங்களுக்குள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    அப்போது ஒவ்வொரு வீரர்களிடமும் இரு ஜாம்பவான்களும் தனித்தனியாக பேசி ஊக்கப்படுத்தினர். ஓரிரு வாரத்திற்குள் சரியான வியூகங்களுடன் ஆஸ்திரேலியா முழு உத்வேகத்துடன் செயல்பட்டது. வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆதரவு அளித்தனர். 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் சமனில் (0-0) முடிந்தது.

    இவ்வாறு டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் பதில் அளித்து கூறுகையில் ‘என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்வேன். இப்படி சொல்வதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்ல முடியும். இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். திறமை அடிப்படையில் பார்த்தால், இந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண்டும். ஆனால் இந்திய அணியில் ஏதோ ஒன்று இல்லாதது போல் தெரிகிறது.

    மற்றொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது. உள்ளூரில் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய பந்து வீச்சு இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதனால் தான் இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறுகிறேன்.

    இந்த தொடர், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கும், விராட் கோலியின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும். அதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’ என்றார்.

    ‘ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களில் ஒரு இன்னிங்சில் 350 முதல் 400 ரன்களை சீராக எடுத்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு எடுக்க முடிந்தால், ஆச்சரியப்படும் நிறைய பேரில் நானும் ஒருவனாக இருப்பேன்’ என்றும் இயான் சேப்பல் குறிப்பிட்டார். #AUSvIND  #DeanJones
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிட மாட்டார்கள் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடு்தமத மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா 18-ந்தேதி இந்த தொடருக்கு தகுதி பெறும் அணியோடு மோதுகிறது. அடுத்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    அதேவேளையில் பாகிஸ்தான் 16-ந்தேதிக்குப் பின் இரண்டு இடைவெளிவிட்டு இந்தியாவை எதிர்கொள்கிறது. முக்கியமான போட்டிக்கு முன் ஓய்வு இல்லாமல் அட்டவணை தயாரித்துள்ளதாக பிசிசிஐ கண்டனம் தெரிவித்திருந்தது இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிடமாட்டார்கள் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘நம்முடைய காலத்தில் அடுத்தடுத்து நாளில் விளையாடி இருக்கிறோம். ஆகவே, தற்போது ஏன் புகார் செய்ய வேண்டும்?. ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடத்தான் செய்கிறார்கள். இங்கிலாந்து தொடரின்போது மூன்ற முறை 11 நாட்கள் தொடர்ந்து விளையாடியிருக்கிறோம்.



    இது கொஞ்சம் கஷ்டானதுதான் என்பது எனக்குத் தெரியும், ஆனால் ஏன் பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணி தொடர்ந்து விளையாடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

    களைப்பு ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஆனால், தற்போதுள்ள வீரர்கள் தடகள் வீரர்கள் போன்றும் நம்பமுடியாத அளவிற்கான பிட்டையும் பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாகத்தான் இருப்பார்கள்.

    இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
    ×