search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wicket Keeper"

    • விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
    • நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.

    பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக விரிதிமான் சஹா செய்த ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #KKRvRR #DineshKarthik

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான தினேஷ் கார்த்திக், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பரான விரிதிமான் சஹாவின் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார்.



    நேற்றை போட்டியில் தினேஷ் கார்த்திக் 3 கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து எதிரணி வீரர்கள் நான்கு பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார்.  தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்கள் விழ காரணமாக இருந்தது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்திய விக்கெட் கீப்பரான விரிதிமான் சஹா இந்த சாதனையை படைத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்கள் விழ காரணமாக இருந்ததன் மூலம் சஹாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #KKRvRR #DineshKarthik
    ×