search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஜெர்சி"

    • நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது
    • மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது.

    இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்தது.
    • இதேபோல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகமும் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

    மும்பை:

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தோம் என மும்பை நிர்வாகம் அறிவித்தது.

     இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    இதேபோல், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர்.

    • ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
    • இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.

    கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.

    ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    ×