search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adidas"

    • உலகின் பல்வேறு நாடுகளில் திறன் மையங்களை கொண்டுள்ளது.
    • சென்னையில் அடிடாஸ் திறன் மையம் செயல்பட இருக்கிறது.

    அடிடாஸ் நிறுவனம் சீனாவை தவிர்த்து ஆசியாவில் தனது முதல் சர்வதேச திறன் மையத்தை (ஜி.சி.சி.) சென்னையில் கட்டமைக்க இருக்கிறது. காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக அடிடாஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் திறன் மையங்களை கொண்டுள்ளது.

    ஜெர்மனியில் உள்ள பவேரியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் அடிடாஸ், இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழநாட்டின் தலைநகர் சென்னையில் அடிடாஸ் திறன் மையம் செயல்பட இருக்கிறது. சென்னையில் இருந்து பணியாற்ற இருக்கும் அகில் கபூர் அடிடாஸ் இந்தியா திறன் மையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    "இவரது தலைமையில் இந்த திறன் மையத்தில் கொள்முதல், நிதி நிர்வாகம் மற்றும் ஆய்வு, கட்டணங்கள் மற்றும் செலவினங்களை அறிக்கையாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது," என இது தொடர்பான விவரம் அறிந்த நபர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த திறன் மையத்தில் பணியாற்ற அடுத்த மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அதிக திறன் கொண்டவர்கள் அடங்கிய குழு பணியமர்த்தப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.
    • இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2020 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது.

    அதனை தொடர்ந்து புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.

    இந்நிலையில் இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன நடக்கிறது அங்கே என ஆச்சர்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    • அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
    • ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

    இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது.

    இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

    இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

    • ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
    • இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.

    கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.

    ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    ×