search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india vs australia"

    • ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
    • ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது

    பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

    தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.

    ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.

    இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.

    கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.

    2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டியை காண பிரதமர் மோடியும் வந்திருந்தார்
    • இனி வரும் காலங்களில் ஊக்கமுடன் செயலாற்ற இது உதவும் என்றார் சேவாக்

    4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரின் 2023க்கான 13-வது போட்டி தொடர், அக்டோபர் 5 அன்று தொடங்கி நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது. அனைத்து போட்டிகளும் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்றது.

    இப்போட்டி தொடரின் இறுதி போட்டி, குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.

    இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தார்.

    இத்தொடரின் ஆரம்பம் முதல், பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்திய அணியினர், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரிடம் தோல்வி அடைந்தனர். உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுதோல்வி, இந்திய அணியினரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.

    இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கை குலுக்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

    இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான "அதிரடி மன்னன்" வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    வீரர்களை ஓய்வு அறையில் (dressing room) நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது. படுதோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது. இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும்.

    இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

    112 கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஐசிசியின் "ஹால் ஆஃப் ஃபேம்" (Hall of Fame) எனும் புகழ் பெற்ற சாதனையாளர்களின் பட்டியலில் சில வாரங்களுக்கு முன், வீரேந்தர் சேவாக்கின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவாக், இப்பட்டியலில் இணையும் 8-வது இந்திய வீரர் ஆவார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடியவர் ஹேடன்
    • வெள்ளை நிற மாடலை ஹேடன் விரும்பி தேர்வு செய்துள்ளார்

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் (Matthew Hayden).

    தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிப்பில் பல சாதனைகளை புரிந்த ஹேடன், சுமார் 15 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.

    2003 ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுடனான இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி அந்த அணி வெற்றி பெற வழி தேடி தந்தவர்களில் ஹேடனும் ஒருவர்.

    இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா ஆட்டோ. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.

    கடந்த 2015ல் மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான ஆஸ்திரேலிய தூதராக மேத்யூ ஹேடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் பல கார்களை இணையதள வழியாக ஹேடன் விளம்பரப்படுத்தி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன் ஹேடன், மஹிந்திரா நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் ஒன்றை வாங்கினார். "எவரெஸ்ட் வைட்" (Everest White) எனும் வெள்ளை நிற ஸ்கார்பியோ மாடலை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது.

    இது குறித்து ஹேடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில் ஸ்கார்பியோவின் பல அம்சங்களை ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் புகழ்ந்து பேசுகிறார்.

    பயணிகளுக்கான கார்களில் எஸ்.யூ.வி. (SUV) எனப்படும் வாகன வகையை சேர்ந்த ஸ்கார்பியோ காரை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக ஹேடன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் "ஸ்கார்பியோ என்" மாடல்களில் டீஸல் எஞ்சின் பொருத்தப்பட்டவை மட்டுமே விற்கப்படுகின்றன.

    ஹேடன் தேர்வு செய்துள்ள "ஸ்கார்பியோ என்", கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவின் சிம்ப்சன் பாலைவனத்தை (Simpson Desert) அதிவேகமாக கடந்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

    இந்தியாவில், மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ கார்தான் அதிக விற்பனையை குவிக்கும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்
    • அத்துமீறி நுழைந்த நபர், கோலியை நெருங்கி அவர் தோளில் கை போட முயன்றார்

    4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்கியது. பல சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 அன்று நடைபெற்றது.

    மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

    விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டியில், 13-வது ஓவர் நிறைவடையும் நேரத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்திருந்தது. இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் தீவிர கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

    அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து ஒரு நபர், மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்தார். இவரை கண்ட பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுக்க முயன்றனர்.

    முகத்தை துணியால் மூடி, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் வேகமாக ஓடி, இந்திய ஆட்டக்காரர் விராட் கோலிக்கு அருகே சென்றார். அவரை நெருங்கிய அந்த நபர், ஒரு சில வினாடிகள் விராட் கோலியின் தோளில் கை போட முயன்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி வெளியேற்றினர்.

    இச்சம்பவத்தால் சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அழைத்து சென்றனர். அத்துமீறிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து ஆட்டம் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றது.

    • இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது
    • பயனர்களின் "வாலட்" கணக்கில் பரிசு தொகை சேர்க்கப்படும் என்றார் புனீத்

    இந்தியாவில் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.

    2011ல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் ரூ.100 கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "ஆப் வால்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
    • 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

    இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

    சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.

    அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.

    அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.

    இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 62 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 46 ரன்களையும் எடுத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது.
    • பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.இதனால் சேப்பாக்கம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.

    பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • ஆடுகளத்தை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.

    இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் தற்போது பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது.

    இதை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பிறகு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூரில் இன்று 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. #indvsaus #t20cricket
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் ரன்களை அள்ளி கொடுத்த இந்திய பவுலர்கள் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்) வெகுவாக கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை கெடுத்து விட்டது. இனி தொடரை வெல்வதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்வதற்கு இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள். இதில் கிடைக்கும் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது. இதனால் 3-வது சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    இந்த ஆண்டில் நிறைய சறுக்கலை சந்தித்து இருக்கும் ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரை வசப்படுத்த வரிந்து கட்டுவார்கள். பயிற்சியின் போது கணுக்காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக்குக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அழைக்கப்பட்டு உள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடாத ஸ்டார்க் இன்று களம் காணுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்கு மழையால் ஆபத்து இருக்காது என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    சிட்னியில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 4-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒன்றில் வீழ்ந்தது. அந்த தோல்வி இந்தியாவுக்கு எதிராக (2016-ம் ஆண்டு) அடைந்தது ஆகும். இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை இந்திய அணி கடைசி பந்தில் எட்டி சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.

    இந்திய அணி கடைசியாக ஆடிய ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை இந்திய அணி தக்கவைக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

    ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, பென் மெக்டெர்மோட், ஜாசன் பெரென்டோர்ப், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே ஆண்ட்ரூ டை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #indvsaus #t20cricket
    இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
    பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.



    இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    ×