search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pink Ball Test"

    இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
    பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.



    இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

    முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.



    அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

    ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.
    எதிர்கால கிரிக்கெட்டான பகல்-இரவு டெஸ்டிலவ் இந்தியாவல் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். #PinkBallTest
    20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமான பின்பு 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை அறிந்து கொள்வதற்கு டெஸட் கிரிக்கெட்டுதான் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. அதேவேளையில் ரசிகர்கள் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியை உட்கார்ந்து பார்ப்பதற்கு விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து விடக்கூடாது என்பதில் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனமாக இருக்கின்றன.

    மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிங்க்-பந்தில் விளையாடப்படும் டே-நைட் டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிக அளவில் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்தியா, வங்காள தேச அணிகளைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் டே-நைட் டெஸ்டில் விளையாடிவிட்டன. இந்தியா இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது டே-நைட் டெஸ்டில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.

    ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டிற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்தியா தயாராவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டே-நைட் டெஸ்டிற்கு ஆதரவாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக சவுரவ் கங்குலி, இந்திய அணியால் டே-நைட் டெஸ்டில் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டே-நைட் டெஸ்ட் போட்டிதான் முன்னோக்கிச் செல்லும் வழி. ஒவ்வொரு நாடும் டே-நைட் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இந்தியா சற்று ஒத்திவைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான நீண்ட கால வரையறை டே-நைட் போட்டிதான்.

    இந்தியா சிறந்த அணியாக உள்ளது. அவர்களால் டே-நைட் டெஸ்டை வெற்றி பெற முடியும். டே-நைட் டெஸ்டில் பந்து மட்டும்தான் மாறுபட்டவை. மற்றபடி எந்த மாற்றத்தையும் நான் அதில் பார்க்கவில்லை. இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியும்’’ என்றார்.
    ×