என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா - இந்தியா"

    • 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
    • இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.

    முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
    பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.



    இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

    முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.



    அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

    ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.
    ×