search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia vs india"

    நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடுமையானதாக இருக்கும் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. வார்னர், ஸமித், பான்கிராப்ட் இல்லாத அந்த அணியை இந்தியா இந்த முறை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக வருகிற தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. எப்போதுமே கடுமையானதாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மண்ணில் அவர்களை துவம்சம் செய்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள்.



    எங்களது அணியில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் இல்லாததால் வீக்கான அணி என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறந்த அணியாக உருவெடுக்க முயற்சி செய்வோம். எங்களுடைய மண்ணில் விளையாடும்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தொடரிலேயே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

    தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதியில் 1-2 என தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மண்ணில் அவர்களை ஒருவழி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என இயன் சேப்பல் கூறியுள்ளார். #ENGvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாட தொடங்கியுள்ளது. முதல் தொடராக தென்ஆப்பிரிக்கா சென்றது. அதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 இழந்தது.

    விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.



    தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், எதிரணி பந்து வீச்சாளர்கள் புதுப்பந்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடமாட்டார்கள்’’ என்றார்.
    இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
    பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.



    இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

    முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.



    அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

    ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.
    ×