என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு அரிய வாய்ப்பு- இயன் சேப்பல்
Byமாலை மலர்10 Jun 2018 10:36 AM GMT (Updated: 10 Jun 2018 10:36 AM GMT)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என இயன் சேப்பல் கூறியுள்ளார். #ENGvIND
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாட தொடங்கியுள்ளது. முதல் தொடராக தென்ஆப்பிரிக்கா சென்றது. அதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 இழந்தது.
விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.
இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.
தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.
தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், எதிரணி பந்து வீச்சாளர்கள் புதுப்பந்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடமாட்டார்கள்’’ என்றார்.
விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.
இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.
தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.
தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், எதிரணி பந்து வீச்சாளர்கள் புதுப்பந்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடமாட்டார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X