search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்கால கிரிக்கெட்டான டே-நைட் டெஸ்டில் இந்தியாவால் வெற்றி பெற முடியும்- கங்குலி
    X

    எதிர்கால கிரிக்கெட்டான டே-நைட் டெஸ்டில் இந்தியாவால் வெற்றி பெற முடியும்- கங்குலி

    எதிர்கால கிரிக்கெட்டான பகல்-இரவு டெஸ்டிலவ் இந்தியாவல் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். #PinkBallTest
    20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமான பின்பு 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை அறிந்து கொள்வதற்கு டெஸட் கிரிக்கெட்டுதான் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. அதேவேளையில் ரசிகர்கள் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியை உட்கார்ந்து பார்ப்பதற்கு விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து விடக்கூடாது என்பதில் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனமாக இருக்கின்றன.

    மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிங்க்-பந்தில் விளையாடப்படும் டே-நைட் டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிக அளவில் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்தியா, வங்காள தேச அணிகளைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் டே-நைட் டெஸ்டில் விளையாடிவிட்டன. இந்தியா இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது டே-நைட் டெஸ்டில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.

    ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டிற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்தியா தயாராவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டே-நைட் டெஸ்டிற்கு ஆதரவாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக சவுரவ் கங்குலி, இந்திய அணியால் டே-நைட் டெஸ்டில் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டே-நைட் டெஸ்ட் போட்டிதான் முன்னோக்கிச் செல்லும் வழி. ஒவ்வொரு நாடும் டே-நைட் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இந்தியா சற்று ஒத்திவைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான நீண்ட கால வரையறை டே-நைட் போட்டிதான்.

    இந்தியா சிறந்த அணியாக உள்ளது. அவர்களால் டே-நைட் டெஸ்டை வெற்றி பெற முடியும். டே-நைட் டெஸ்டில் பந்து மட்டும்தான் மாறுபட்டவை. மற்றபடி எந்த மாற்றத்தையும் நான் அதில் பார்க்கவில்லை. இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியும்’’ என்றார்.
    Next Story
    ×