search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Men's Cricket World Cup 2023"

    • ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
    • ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது

    பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

    தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.

    ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.

    இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.

    கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.

    2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது
    • 1983ல் மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு கபில் தேவ் தேடி தந்தார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கியது.

    இப்போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தொடர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.

    இறுதிப்போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதை காண, இதுவரை நடைபெற்ற அனைத்து ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற அணிகளின் அப்போதைய கேப்டன்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அழைப்பு விடுத்தது.

    ஆனால், இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் முதல்முதலாக உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவின் பெயர் இந்த அழைப்பிதழ் பட்டியலில் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி கபில் தேவ், இன்று நரேந்திர மோடி மைதானத்திற்கே வரவில்லை.

    இது குறித்து முன்னாள் கேப்டன் தெரிவித்ததாவது:

    நான் அழைக்கப்படவில்லை என்பது உண்மைதான். என்னை அழைக்கவில்லை. அதனால் நானும் செல்லவில்லை; அவ்வளவுதான். 1983ல் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுடன் அங்கு இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். எனக்கு வருத்தமில்லை. இது மிக பெரிய நிகழ்ச்சி. பல பொறுப்புகளில் முக்கியமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் எங்களை போன்றவர்களை அழைக்க மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில் மக்களுக்கு மறதி ஏற்படுவது சகஜம்தான்.

    இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

    40 வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் அணி இருந்து வந்தது. 1983 உலக கோப்பை போட்டியில் அவர்களை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது.

    இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்புதான் கிரிக்கெட் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்க தொடங்கியது. அதற்கு பிறகு இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் வர தொடங்கியது. பல இந்திய முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கபில் தேவ்தான் கனவு நாயகன்.

    மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்து, இந்திய இளைஞர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்ள காரணமாயிருந்த கபில் தேவிற்கே தற்போதைய இறுதி போட்டியில் அழைப்பு இல்லை எனும் செய்தியை கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
    • 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்

    இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

    இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.

    இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.

    கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
    • 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது

    கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.

    குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.

    ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
    • வங்க தேச போட்டியில் எளிதாக இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

    மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நாளை மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:

    இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை நாளைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் 'டேட்டிங்' செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த "அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்" என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    நாளை நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.



    ×