search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan Cricket Board"

    • இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
    • 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது

    கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.

    குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.

    ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் அதிக அளவில் ஊழல்கள் மலிந்த கிரிக்கெட் வாரியம் என்று மந்திரி ஹரின் பெர்னாண்டோ அதிர்ச்சிகரமான தகவலை வெளியீட்டு உள்ளார். #SriLankaCricketBoard

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே சூதாட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது.

    2017 ‘லீக்’ ஒன்றில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரர் தில்காரா லோகுட்டிகே ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார்.

    அதை தொடர்ந்து முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஜெயசூர்யா ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் வேகப்பந்து வீரர் நுவன் சொயகா மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்டார்.

    ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் உலகிலேயே இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் அதிக அளவில் ஊழல்கள் மலிந்த கிரிக்கெட் வாரியம் என்று இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ அதிர்ச்சிகரமான தகவலை வெளியீட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிரிக்கெட் ஊழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் மிகமிக மோசமாக திகழ்கிறது என்று ஐ.சி.சி. மதிப்பிட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது .

    சூதாட்ட தரகர்களுடன் இருக்கும் தொடர்பு மட்டும் பிரச்சினை அல்ல. உள்ளூர் போட்டிகளில் கூட நிழல் உலகத்துடன் தொடர்பு இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்தது. தவறு செய்தவர்கள் விவரங்களை தெரிவித்து ஒப்புக்கொண்டால் ஐ.சி.சி. வீரர்களை மன்னிக்க தயாராக இருக்கிறது.

    மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக சட்டம் இயற்ற அரசு விரும்புகிறது.

    இவ்வாறு பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். #SriLankaCricketBoard

    ×