search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Pakistan match"

    • பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நியூசிலாந்து நிர்ணயித்தது
    • அசராத சேவாக் தனது பதிலில் 2 காரணங்களுக்கு நன்றி கூறுங்கள் என்றார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பெங்களூரூவில் நேற்று போட்டி நடைபெற்றது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

    பிறகு பாகிஸ்தான் ஆடிய போது மழையின் காரணமாக டக்வர்த்-லூயிஸ்-ஸ்டர்ன் (Duckworth-Lewis-Stern) முறைப்படி இலக்குகள் மாற்றப்பட்டது. அப்போது புதிய இலக்கை அடைய ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் திறமையை பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்தனர்.

    இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சாதனையாளருமான வீரேந்தர் சேவாக், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் ஜமானின் ஆட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "ஜமான் பேட்டிங்கில் 'ஜஜ்பே' (வெல்லும் வெறி) குறையவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

    "ஜஸ்பே" என்பதை "ஜஜ்பே" என சேவாக் குறிப்பிட்டுள்ளதாக கூறிய ஒரு பாகிஸ்தானியர் "நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி சொல்ல 'ஜஸ்பே' ஒரு 13-ஆவது காரணமாகும்" என பதிலளித்தார்.

    இதன் மூலம் மறைமுகமாக சேவாக்கை கிண்டல் செய்து விட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்த பாகிஸ்தானியர் கருதினார்.

    ஆனால், '13 முறை நன்றி' பதிலுக்கு அசராத சேவாக், "தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?" என கேள்வி எழுப்பினார்.

    இதுவரை ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 8 முறை தோற்ற பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. அதே போல் சில வருடங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், பல நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.

    இரண்டையும் குறிப்பிட்டு தனது நடுநிலையான பாராட்டை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சேவாக்கின் பதிலை சமூக வலைதளங்களில் பலரும் "சேவாக்கின் அதிரடி" என பாராட்டி வருகின்றனர்.

    • பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
    • வங்க தேச போட்டியில் எளிதாக இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

    மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நாளை மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:

    இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை நாளைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் 'டேட்டிங்' செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த "அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்" என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    நாளை நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.



    • விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
    • விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.

    மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.

    இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.

    விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

    விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    ×