search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC World Cup 2023"

    • பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நியூசிலாந்து நிர்ணயித்தது
    • அசராத சேவாக் தனது பதிலில் 2 காரணங்களுக்கு நன்றி கூறுங்கள் என்றார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பெங்களூரூவில் நேற்று போட்டி நடைபெற்றது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

    பிறகு பாகிஸ்தான் ஆடிய போது மழையின் காரணமாக டக்வர்த்-லூயிஸ்-ஸ்டர்ன் (Duckworth-Lewis-Stern) முறைப்படி இலக்குகள் மாற்றப்பட்டது. அப்போது புதிய இலக்கை அடைய ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் திறமையை பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்தனர்.

    இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சாதனையாளருமான வீரேந்தர் சேவாக், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் ஜமானின் ஆட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "ஜமான் பேட்டிங்கில் 'ஜஜ்பே' (வெல்லும் வெறி) குறையவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

    "ஜஸ்பே" என்பதை "ஜஜ்பே" என சேவாக் குறிப்பிட்டுள்ளதாக கூறிய ஒரு பாகிஸ்தானியர் "நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி சொல்ல 'ஜஸ்பே' ஒரு 13-ஆவது காரணமாகும்" என பதிலளித்தார்.

    இதன் மூலம் மறைமுகமாக சேவாக்கை கிண்டல் செய்து விட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்த பாகிஸ்தானியர் கருதினார்.

    ஆனால், '13 முறை நன்றி' பதிலுக்கு அசராத சேவாக், "தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?" என கேள்வி எழுப்பினார்.

    இதுவரை ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 8 முறை தோற்ற பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. அதே போல் சில வருடங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், பல நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.

    இரண்டையும் குறிப்பிட்டு தனது நடுநிலையான பாராட்டை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சேவாக்கின் பதிலை சமூக வலைதளங்களில் பலரும் "சேவாக்கின் அதிரடி" என பாராட்டி வருகின்றனர்.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு போட்டி பல வருடங்களாக நடைபெறவில்லை
    • களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வது வழக்கம்

    ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    2012-ஆம் வருடத்திற்கு பிறகு ஐசிசி தொடரிலும், ஆசியா கோப்பை தொடரிலும் மட்டுமே இரு அணிகளும் சந்தித்து வருகின்றன. இருதரப்பு போட்டி நீண்டகாலமாக நடைபெறவில்லை.

    விளையாட்டு போட்டியாக இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் நடப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ரசிகர்கள் ஏற்படுத்துவதும், அதே போல் களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வதும் வழக்கம்.

    ஆனால், சமீப காலங்களில் மைதானத்திற்கு வெளியே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஆரோக்கியமான நட்பு நிலவி வருகிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் குழந்தைக்கு அன்பு பரிசளித்தார்.


     



    கடந்த 2022ல் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடரின் போது இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃபின் குழந்தையை கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.


     



    ஆகஸ்ட் 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினயின் போது ஏற்பட்ட கலவரத்தில், பாகிஸ்தான் வீரர் ஃபசல் மெஹ்மூத்தை கலவரக்காரர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு காப்பாற்றியது சரித்திரத்தில் பதிவான நிகழ்வாகும்.

    1987ல் இருதரப்பு தொடர் இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்களின் போது நடைபெற்றது. இரு தரப்பு வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதும் இதனால் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் நீச்சல் குளமே நிறம் மாறியதாக அப்போதைய விக்கெட் கீப்பர் கிரண் மோரே தெரிவித்திருந்தார்.

    90களில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் பரஸ்பர நட்பை வெளியே காட்டி கொள்ளாமல் இருப்பது வழக்கம். இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களின் தனிப்பட்ட அழைப்பிற்காக இந்தியா வரும் போது இரு நாட்டு வீரர்களும் நட்சத்திர ஓட்டல்களில் சந்திப்புகளை முடித்து கொள்வார்கள். பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் தனக்கு ரசிகர்கள் அதிகம் என கூறியதற்காக ஷஹித் அஃப்ரிதி ஒரு முறை அந்நாட்டில் நீதிமன்றத்திற்கு செல்ல நேர்ந்தது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கும் போது, அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து தனது சமகால நண்பர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


     



    2021ல் இந்தியாவின் பழம்பெரும் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி ஒரு சீக்கிய வழிபாட்டிற்காக பாகிஸ்தான் சென்ற போது அவருடைய சமகால பாகிஸ்தான் வீரர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாமை, "உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர்" என புகழ்ந்திருந்தார். கோலி கடந்த செப்டம்பர் மாதம், இலங்கை கண்டியில் உள்ள பல்லேகெலெ மைதானத்தில் பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் உடன் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்ததும் வைரலானது.

    நேற்றைய இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கு எதிராக கூச்சலிட்ட போது அவ்வாறு செய்ய வேண்டாம் என விராட் கோலி அவர்களை கேட்டு கொண்டார். இவ்வருட ஐபிஎல் தொடரின் போது இவர்களிருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.




     


    போட்டியை போட்டியாக மட்டுமே பார்க்கும் மனநிலை, ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் வளர்ந்து வருவதை ஆரோக்கியமான மாற்றமாக கருதுவதாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • "ட்ராஃபி டூர்" தற்போது சென்னையை வந்தடைத்திருக்கிறது
    • பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது

    வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் ஐ.சி.சி. ஆண்கள் உலக கோப்பைக்கான போட்டித்தொடர் நடைபெறவிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டி, தற்போது 2023ல் 13-வது போட்டி தொடராக நடக்க இருக்கிறது.

    போட்டிக்கு முன்னதாக "ட்ராஃபி டூர்" எனும் வழக்கப்படி ஓவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களிலும் இந்த கோப்பை பார்வைக்கு எடுத்து செல்லப்படும். அதன்படி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட போது தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்க தலைவரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான அசோக் சிகாமணியின் முன்னிலையில் தமிழக முதல்வர் இக்கோப்பையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

    அதனுடன் "இந்தியா வெற்றி பெறும்" என ஒரு குறுஞ்செய்தியை ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் பல மாநிலங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணியில் தி.மு.க.வும் ஒரு உறுப்பினர் என்பதால், ஸ்டாலின் இந்திய கிரிக்கெட் அணியுடன் சேர்த்து, தங்களது அரசியல் கூட்டணியும் வெற்றி பெறும் என மறைமுகமாக தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி நடக்கிறது
    • அக்டோபர் 15-ம் தேதிதான் நவராத்தி விழாவும் தொடங்குகிறது

    இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    • ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது
    • 8.5 ஓவர்கள் மீதம் இருந்ததும் விக்கெட் கைவசம் இல்லாததால் ஜிம்பாப்வே தோல்வி

    உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி பெற்றநிலையில், கடைசி இடத்திற்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டி செய்த ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் ஸ்காட்லாந்து அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.

    அந்த அணியின் மைக்கேல் லீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 48 ரன்கள் அடித்தார். பிராண்டன் மெக்கல்லம் 34 ரன்களும், மேத்யூ கிராஸ் 38 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர், 235 சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. ஷிகந்தர் ரசா (34), ரியான் பர்ல் (83), வெஸ்லி மாதேவேர் (40) வெற்றிக்காக போரடினர்.

    என்றாலும் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததால் 41.1 ஓவரில் 203 சுருண்டது ஜிம்பாப்வே. இதன்காரணமாக 31 ரன்னில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் கிறிஸ் சோலே 3 விக்கெட்டும், பிராண்டன் மெக்கல்லம் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    நாளை நெதர்லாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாட தகுதி பெறும்.

    ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் சிக்ஸில் இன்று ஓமன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நாளை ஸ்காட்லாந்து- நெதர்லா்நது, அமெரிக்கா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி இலங்கை- வெஸ்ட் அணிகள் விளையாடுகின்றன. 9-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தொடருக்கு 10 அணிகள் தகுதிப்பெற்றன. தலா ஐந்து அணிகளாக இரண்டு பிரிவுகளாக 10 அணிகளும் பிரிக்கப்பட்டன. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் சிக்ஸ் அணிக்கு தகுதிப் பெற்ற அணிகள் குரூப் பிரிவில் வெற்றி பெற்ற புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக 'பி' பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை குரூப் போட்டியில் இரு அணிகளையும் வீழ்த்தியிருந்ததால் நான்கு புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸில் விளையாடியது.

    • மெகா போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போட்டி பயிற்சிகள் தேவை
    • அனைவரும் உடற்தகுதி மற்றும் நன்றாக இருந்தால் இந்தியா ஒரு முழுமையான அணியாக இருக்கும்

    இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-

    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த மெகா போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போட்டி பயிற்சிகள் தேவை. எனவே இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். ஹர்திக் பாண்ட்யாவை நினைத்து நான் எப்போதும் கவலைப்படுவேன். ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைகிறார். முன்னணி வீரர்கள் அனைவரும் உடற்தகுதி மற்றும் நன்றாக இருந்தால் இந்தியா ஒரு முழுமையான அணியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் அடைந்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் 15-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதல்
    • 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

    ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது.

    போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

    5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

    ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

    பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாம்.

    ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிக அளவில் ரூம்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது.

    குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் ரூம்கள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும்.

    இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்'' என்றார்.

    நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் ரூம் வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

    • அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது
    • இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.

    அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா

    அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்

    அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா

    ×