search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india vs west indies"

    • அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது
    • 1983ல் மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு கபில் தேவ் தேடி தந்தார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கியது.

    இப்போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தொடர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.

    இறுதிப்போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதை காண, இதுவரை நடைபெற்ற அனைத்து ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற அணிகளின் அப்போதைய கேப்டன்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அழைப்பு விடுத்தது.

    ஆனால், இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் முதல்முதலாக உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவின் பெயர் இந்த அழைப்பிதழ் பட்டியலில் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி கபில் தேவ், இன்று நரேந்திர மோடி மைதானத்திற்கே வரவில்லை.

    இது குறித்து முன்னாள் கேப்டன் தெரிவித்ததாவது:

    நான் அழைக்கப்படவில்லை என்பது உண்மைதான். என்னை அழைக்கவில்லை. அதனால் நானும் செல்லவில்லை; அவ்வளவுதான். 1983ல் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுடன் அங்கு இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். எனக்கு வருத்தமில்லை. இது மிக பெரிய நிகழ்ச்சி. பல பொறுப்புகளில் முக்கியமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் எங்களை போன்றவர்களை அழைக்க மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில் மக்களுக்கு மறதி ஏற்படுவது சகஜம்தான்.

    இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

    40 வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் அணி இருந்து வந்தது. 1983 உலக கோப்பை போட்டியில் அவர்களை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது.

    இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்புதான் கிரிக்கெட் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்க தொடங்கியது. அதற்கு பிறகு இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் வர தொடங்கியது. பல இந்திய முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கபில் தேவ்தான் கனவு நாயகன்.

    மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்து, இந்திய இளைஞர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்ள காரணமாயிருந்த கபில் தேவிற்கே தற்போதைய இறுதி போட்டியில் அழைப்பு இல்லை எனும் செய்தியை கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    கொல்கத்தா:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது. இதனால் இந்திய அணியின் அதிரடி நாளையும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கேப்டன் வீராட்கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    அதே நேரத்தில் தேர்வு குழுவினர் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. இளம் வீரர் ரிசப்பண்டுக்கு வழி விடும் வகையில் டோனியே 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார் என்று வீராட்கோலி தெரிவித்து இருந்தார்.

    கேப்டன் ரோகித்சர்மா, தவான், ராகுல், ஷிரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப்பண்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த தினேஷ்கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாட கூடியது.

    இதனால் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. அந்த அணியில் கேப்டன் பிராத் வெயிட், ஹெட்மயா, லீவிஸ், ரஸ்சல், டாரன் பிராவோ, போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvWI #ODI #ViratKohli #rohitsharma
    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம்  கவுகாத்தியில் இன்று நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 

    இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேர்த்தியான விளையாட்டை முன்னெடுத்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தவான் வந்த வேகத்தில் திரும்பினார். இதனையடுத்து நின்று விளையாடிய விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியை காட்டினர். விராட் கோலி சதம் கடத்து விளையாடிய நிலையில் மறுபுறம் ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ய அபாரம் காட்டினார். பந்துகளை பவுண்டரி லைனை நோக்கி சிதறடித்து விளையாடிய விராட் கோலி 32.6 வது ஓவரில் 140 ரன்களில் வெளியேறினார். 

    இதற்கிடையே சதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மாவுடன் அம்பத்தி ராய்டு களமிறங்கினார். இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். முடிவில் இந்திய அணி 42.1 வது ஓவரில் 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 152 ரன்களுடனும், அம்பத்தி ராய்டு 22 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  #INDvWI #ODI #ViratKohli #rohitsharma 
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI #RishabhPant #TeamIndia
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. 

    இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:- 

    விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட், டோனி(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

    கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷப் பன்ட், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். ஆடும் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. 

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அதே உற்சாகத்தில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும். 

    அதேசமயம், டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கடுமையாக போராடும்.  எனவே, டெஸ்ட் போட்டித் தொடர் போன்று இல்லாமல், ஒருநாள் தொடரில் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். #INDvWI #RishabhPant #TeamIndia
    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி நாளை கவுகாத்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. #indvswi #odi #viratkohli

    கவுகாத்தி:

    ஜேகன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.

    மிடில் ஆர்டர் வரிசையில் அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, ரி‌ஷப் பண்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குல்தீப் யாதவ், சாகுல் இருப்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்தான். இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர்ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணியை குறைத்து மதித்து விட முடியாது. அந்த அணி திடீரென்று எழுச்சி பெற்று சிறப்பாக விளையாட கூடியது.

    இதனால் இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ்பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.

    வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ். #indvswi #odi #viratkohli 

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். #INDvWI
    ஐதராபாத்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆடியது. எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அதன்பிறகு சற்று நிமிர்ந்தது. ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டவ்ரிச் 30 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 52 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்னுடனும், பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

    இன்று 2-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சேஸ், சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பிஷூ 2 ரன்களிலும், கேப்ரியேல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

    இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

    இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், பிருத்வி ஷா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன் சேர்த்து வருகின்றனர். #INDvWI
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது. #INDvsWI #TeamIndia
    ஐதராபாத்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5-வது வீரர் இவர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் இடம்பெறவில்லை. கீமோ பால் செர்மன் லெவிசுக்கு பதில் ஜேசன் ஹோல்டர், ஜோமல் வாரிகன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    அணிகள் விவரம்:

    இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.

    வெஸ்ட் இண்டீஸ்:  ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல். #INDvsWI #TeamIndia
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #IndiaVsWestIndies #PrithviShaw
    ராஜ்கோட்:

    ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.



    இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பிருத்வி ஷா அறிமுகமாகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பை பிராத்வெயிட் ஏற்றுள்ளார். சுனில் அம்பிரிஸ் ஷெர்மான் லெவிஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ், ஷமி, குல்தீப்

    வெஸ்ட் இண்டீஸ்:  பிராத்வெயிட்(கேப்டன்), பாவெல், ஹெட்மையல், ஹோப், சேஸ், அம்பிரிஸ், டோரிச், பால், பிஷூ, லெவிஸ், கேபிரியேல். #IndiaVsWestIndies #PrithviShaw
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்தியா அணியில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்காததால் தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் சாடியுள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறத. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவானுக்கு இடம் அளிக்கப்படவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இடம் பெறாததற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்வுக்குழு மீது சாடியுள்ளார். ரோகித் சர்மா அணியில் இடம்பெறாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லை. உண்மையிலேயே தேர்வாளர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?. யாராவது எனக்கு தடயம் (Clue) கொடுக்க முடியாமா? தயது செய்து எனக்கு தெரிவியுங்கள், என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது போட்டி டிக்கெட் பிரச்சனையால் மாற்றப்பட வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #INDvWI #BCCI
    மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இதில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 24-ந்தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிசிசிஐ-யின் புது அரசியலமைப்பு விதிப்படி ஒரு மைதானத்தில் இருக்கும் மொத்த டிக்கெட்டில் 90 சதவீத டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்க அளிக்கப்பட வேண்டும். 10 சதவீதம்தாம் கிரிக்கெட் சங்கத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

    இந்த டிக்கெட்டை வைத்துதான் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஸ்பான்சர் மற்றும் உயர்அதிகாரிகள் போன்றவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். ஹோல்கர் மைதானத்தில் 27 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இதில் 10 சதவீதமான 2700 டிக்கெட்டுக்கள் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒதுக்கப்படும்.



    இந்நிலையில் பிசிசிஐ முக்கிய பிரமுகர்களுக்கு என 5 சதவீத டிக்கெட்டுக்களை கேட்கிறது. இதற்கு மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உடன்படவில்லை. பிசிசிஐ தனது முடிவை மாற்றாவிடில் போட்டியை நடத்த முடியாது என்பதில் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உறுதியாக உள்ளது. இதனால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
    ×